நடிகை சிம்ரன், இவரது காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர். மேலும் இவர் காலகட்டத்தில்நடித்த இருந்த அணைத்து முக்கிய நடிகர்களுடனும் நடித்தவர். இடுப்பழகி என்று சினிமாவில் பெயர் பெற்ற சிம்ரன், இதுவரை 75 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் கொடிகட்டி பரந்த நடிகை சிம்ரன் ,தற்போது சிவா கார்த்திகேயன் நடித்து வரும் “சீமராஜா” விக்ரம் நடித்து வரும் “துருவ நட்சத்திரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் நண்பரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஆதீப், ஆதித் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தது. இவர்கள் இருவரையும் நாம் சின்ன வயதில் தான் பார்திருப்போம். ஆனால் இப்போது இவர்கள் வளர்த்து பெரிய பபிள்ளைகளாக மாறிவிட்டார்கள். தற்போது மூத்தமகன் ஆதீப்பிற்கு 13 வயதாகிறது மற்றும் இளையமகன் ஆதித்திற்கு 7 வயதாகிறது.
இவர்கள் இருவரும் தற்போது பள்ளி முடிந்து கோடை விடுமுறையில் இருப்பதால் நடிகை சிம்ரன், தனது பிள்ளைகளுடன் அமெரிக்காவில் ஊர் சுற்றி வருகிறார். சமீபத்தில் நடிகை சிம்ரன், தனது இரு மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.