வாந்தி தான் வந்தது – விக்ரமுடன் Lip Lock காட்சியில் நடித்த அனுபவம் குறித்து ஐஸ்வர்யா. வீடியோ இதோ.

0
747
Aishwarya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சாந்தா மீனா. திரையுலகில் தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று வருகிறார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார். தற்போது இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அப்போது அவரிடம் மீரா படத்தில் லிப் கிஸ் காட்சி குறித்து கேள்வி கேட்டதற்கு ஐஸ்வர்யா கூறியிருப்பது,

இதையும் பாருங்க : என்னது, மிளாவிற்கு மறைந்த நடிகர் விவேக் இப்படி ஒரு உறவினராம் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்.

- Advertisement -

ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

1992 ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மீரா. இந்த படத்தில் நானும், விக்ரமும் நடித்து இருந்தோம். அப்போது தான் அந்த கிஸ்ஸிங் சீன் எடுக்கப்பட்டது. உண்மையில் சொல்லப்போனால் மிகக் கொடூரமாக இருந்தது. அது ரொமான்ஸ் கிஸ் கிடையாது. வீனஸ் ஸ்டுடியோவில் முழங்கால் அளவில் தண்ணீர் இருக்கும். அதில் டெக்னிசியன், கேமராமேன் எல்லோரும் கால்லை வைத்து இருப்பார்கள். அந்த தண்ணியில் விக்ரம் என்னை முக்கி எடுத்து ஒரு ஆத்திரத்தில் கோபத்தில் கொடுக்கிற மாதிரி முத்தக்காட்சி.

லிப் கிஸ் காட்சி குறித்து ஐஸ்வர்யா சொன்னது:

அப்போது எனக்கு வாயில் தண்ணீர், விக்ரமுக்கு மூக்கில் தண்ணீர் ஏறி ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதில் எங்களுக்கு ரொமான்ஸ் எங்க இருந்து வரும் வாந்தி தான் வந்தது. எப்படியோ அந்த காட்சியை எடுத்து முடித்தது. ஆனால், அது ரொம்ப கஷ்டமான ஒன்றாக இருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் நானும் விக்ரமும் பயங்கரமாக சண்டை போடுவோம். நான் கெனி என்று தான் விக்ரமை கூப்பிடுவேன். ஆரம்பத்தில் பயங்கர சண்டை போடுவோம். மீரா படம் எடுக்கும் போது எனக்கும் கெனிக்கும் ஆகவே ஆகாது.

-விளம்பரம்-

விக்ரம்-ஐஸ்வர்யா இடையேயான உறவு:

கீறி,பாம்பு மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம். செட்டில் உள்ள எல்லோருமே சமாதான படுத்துவார்கள். அந்த அளவிற்கு இரண்டு பேருக்குமே செட்டாகாது. அப்படி இருக்கும்போது தான் இயக்குனர், நீங்கள் இப்படி இருந்தால் படம் ஒழுங்காக வராது. தயவுசெய்து பெஸ்ட் நண்பர்களாக இல்லை என்றாலும் நண்பர்களாக கை கொடுத்துக் கொள்ளுங்கள் என்று சமாதானப்படுத்தினார். அதற்குப் பிறகு ஒரு நாள் ஷூட்டிங்கில் கொடைக்கானலில் சமைக்கும்போது கெனியும் நானும் பேச ஆரம்பித்தோம்.

மீண்டும் விக்ரம் உடன் சந்திப்பு:

அப்போது எங்களுக்குள் நட்பு உருவானது. அதற்கு பிறகு நாங்கள் சண்டை போடவில்லை. பின் பல வருடம் கழித்து கெனியை சந்தித்தேன். அப்போது அவருக்கும் குழந்தைகள் இருந்தது, எனக்கும் குழந்தை இருந்தது. அந்த சமயத்தில் கெனி நம்ப ரெண்டு பேரும் சண்டை போடவே இல்லை பார்த்தியா? என்று கேட்டார். எனக்கு சிரிப்புதான் வந்தது. அப்போது எனக்கு 19 வயது, இப்ப ஒரு குழந்தைக்கு அம்மா மெச்சூரிட்டி இருக்கிறது என்று பேசினோம். இதையெல்லாம் மறக்க முடியாது என்று கூறினார்.

Advertisement