கல்லூரியில் படிக்கும் போது அப்படி இருக்க ஆசை பட்டேன், இப்போ இப்படி இருக்கேன். ஆனால் – ஆண்ட்ரியா பகிர்ந்த கல்லூரி ஸ்டோரி.

0
2441
Andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : ஹீரோவை மாற்றியதும் ரோஜா சீரியலை Trpயில் பின்னுக் தள்ளி முதல் இடத்தை பிடித்த சீரியல்.

- Advertisement -

மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா. அதே போல ஒரு பிரபல நடிகரால் தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்பப் பட்டதாக கூறி இருந்தார்.

நடிகை ஆண்ட்ரியா பிறந்தது அரக்கோணத்தில், பின்னர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் செட்டில் ஆன ஆண்ட்ரியா சென்னையில் உள்ள christian பெண்கள் கல்லூரியில் தான் படித்தார். இப்படி ஒரு நிலையில் கல்லூரி படித்த போது தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ள ஆண்ட்ரியா, கல்லூரியில் படிக்கும் போது adult ஆக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது நான் adult நான் மீண்டும் கல்லூரி காலத்துக்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்,

-விளம்பரம்-
Advertisement