மீனா கணவர் ரொம்ப நல்ல மனிதர், இருந்தும் அவர் இறப்பிற்கு இதனால் தான் நான் போகவே இல்லை – அஜித் பட நடிகை சொன்ன உருக்கமான காரணம்.

0
1987
Meena
- Advertisement -

மீனா கணவரின் இறப்பிற்கு வராதது குறித்து நடிகை மகேஸ்வரி அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே மீனா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். மீனாவின் மகளும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

மீனா கணவர் இறப்பு:

மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம். மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்கள் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளிலும் மீனா கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு மீனா திரையுலகில் 40 ஆண்டை நிறைவு செய்து இருந்ததை கொண்டாடும் விதமாக இவருக்கு தனியார் மீடியா ஒன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது.

மகேஸ்வரி அளித்த பேட்டி:

அதில் மீனாவின் தோழிகளும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மீனாவை குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் மீனாவின் தோழியும் நடிகையும்மான மகேஸ்வரி அவர்கள் மீனாவின் கணவர் குறித்து பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், மீனாவின் கணவர் வித்யாசாகர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். மீனா சாகரை எப்பொழுது சந்தித்தாரோ அப்போதிலிருந்து எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் ஒரு நல்ல நண்பர். கடைசியாக நான் சாகரை ஐதராபாத்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் தான் பார்த்தேன்.

-விளம்பரம்-

மீனா கணவர் இறப்புக்கு வராத காரணம்:

அவர் ரொம்ப அன்பான மனிதர், நேர்மையாக நன்றாக நடந்து கொள்வார். மீனாவின் கணவர் இறந்த செய்தி கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அங்கு சென்று அவரை பார்ப்பதற்கான தைரியம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. இன்னொரு பக்கம் எனக்கு அவரை பார்ப்பதற்கு விருப்பமும் இல்லை. காரணம் அவரை நான் பார்த்து விட்டால் அந்த நொடி நெகட்டிவ்வான மொமெண்டாக மாறிவிடும். மறக்க முடியாத ஒரு மொமெண்டாக எப்போதுமே என்னுடைய மனதிற்குள் இருக்கும். அவர் என்னை எப்போதுமே மேகி மேகி என்று தான் கூப்பிடுவார்.

மீனா கணவர் குறித்து சொன்னது:

அப்படிப்பட்ட ஒரு அன்பான மனிதரை நான் அந்த சூழ்நிலையில் பார்க்க விரும்பவில்லை. மீனாவை அந்த கோலத்தில் பார்ப்பதற்கு எனக்கு தைரியமும் இல்லை. மீனாவும் நானும் கிட்டத்தட்ட 30 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். அந்த துக்கமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அடுத்த நாள் அவரை நான் சென்று பார்த்தேன் .அதோடு இது மாறியான இறப்புகளில் தேவையில்லாத தவறான தகவல் பரப்புகிறார்கள். அப்படியான ஒரு துக்க நிலையில் இருக்கும்போது அவர்களைப் பற்றி தெரியாத தவறான தகவல்களை தங்களுடைய சுய லாபத்திற்காக பரவது தவறான விஷயம் என்று எமோஷனலாக பேசுகிறார்

Advertisement