இதனால தான் என்னால நடிக்க முடியாம போயிருச்சு – வருத்தத்தில் உண்மையை சொன்ன அஜித் பட நடிகை

0
52
- Advertisement -

சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை மாளவிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மாளவிகா. இவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

-விளம்பரம்-

அந்த படத்திற்கு பிறகு இவர் மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘ஆனந்த பூங்காற்றே’ என்ற படத்திலும் நடித்தார். இப்படி சினிமாவில் அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை கொண்டவர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

மாளவிகா திரைப்பயணம்:

மேலும், ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போகவே இவர் படங்களில் துணை நடிகையாகும், ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார். அதன் பின்னர் டான்ஸராகவும் வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போனது.

மாளவிகா திருமணம்:

இதை அடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் மாளவிகா. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார். கடைசியாக இவர் 2009 ஆம் ஆண்டு ‘ஆயுதம் செய்வோம்’ என்ற படத்திலும் கெஸ்ட் ரோலிலும் நடித்தார். தற்போது மாளவிகா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜீவா- சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோல்மால்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மாளவிகா பேட்டி:

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மாளவிகா, எனக்கு 2007-ல் திருமணம் ஆனது. 2008 வரை நடித்துக் கொண்டிருந்தேன். நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. திருமணத்திற்கு பிறகும் நான் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்தேன்.

சினிமாவில் நடிக்காத காரணம்:

அப்போது எதிர்பாராமல் நான் கர்ப்பமானேன். அதனால், நான் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கின எல்லாம் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. ஆனால், நான் ஒருபோதும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விடலாம் என்று நினைக்கவே இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement