முன்பு போதை பொருள் சர்ச்சை, இப்போ ஓட்டுனரிடம் சர்ச்சை – கெட்ட நேரத்தில் சிக்கிய நடிகை முமைத் கான்.

0
1139
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா இடத்தை இன்னும் வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. சினிமா உலகில் பல கிளாமர் நடிகைகள் களத்தில் இறங்கினாலும் சில்க் ஸ்மிதா இடத்தை நிரப்ப முடியவில்லை. அந்த வகையில் ஓரளவு சில்க் ஸ்மிதா இடத்திற்கு வர முயற்சி செய்தவர் நடிகை முமைத் கான். ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான். இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக தான் சினிமா உலகிற்கு வந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை நடிகையாகவும், குத்து பாடல்களுக்கு நடனம் ஆடுபவராக தான் தோன்றி உள்ளார். இப்படி ஒரு நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராஜு என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

- Advertisement -

நடிகை முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8 நாட்கள் கோவாவில் தங்கி விட்டு பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-பணத்தை தரவில்லை என்றும் கூறியுள்ள ராஜு, அதற்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார்.

நடிகை முமைத் கானிற்கு இதுபோன்ற சர்ச்சைகள் எல்லாம் புதிதல்ல . இவர் ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் விசாரிக்கப்பட்டார்.கடந்த 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் போதை மருந்து சப்ளை செய்ததாக ஐதராபாத்தில் கல்வின் மஸ்கர்னஹா என்ற வாலிபரை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.போதை மருந்து பயன்படுத்தியதாக நடிகர்கள் ரவி தேஜா, தருண், நவ்தீப்,  நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர்கள் புரி ஜெகநாத் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 

-விளம்பரம்-

விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட சார்மி, முமைத்கான், புரி ஜெகநாத், ரவி தேஜா உள்ளிட்ட செலப்ரட்டிகள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். அதிலும் நடிகை முமைத் கான் அப்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த விவகிரத்தால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisement