சமீப காலமாக நடிகைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகமாகி கொண்டு வருகிறது . தற்போது பிரபல மலையாள நடிகையின் அந்தரங்க வீடியோ ஒன்றை அவருடைய முன்னாள் காதலர் ஒருவர் இணையதளிதில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மலையாள நடிகையான மைதிலி, பல மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் 2012 ஆண்டு வெளியான ‘இ அடுத்த காலத்து ‘ என்ற படத்தில் நடித்து சிறந்த துணை நடிகை என்ற விருதை கூட பெற்றவர். இவர் 2015 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘லோஹம் ‘ படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபலமான இவர், சினிமாவில் நடிக்க வரும் முன்பு கிரண் குமார் என்ற நபரை காதலித்து உள்ளார். பின்னர் கிரண் குமார் திருமணமானவர் என்று தெரிந்த உடன் அவருடன் உண்டான காதலை முறித்துக் கொண்டுள்ளார் நடிகை மைதிலி.
இந்நிலையில் நடிகை மிதிலி சினிமாவில் பிரபலமடைந்தவுடன் கிரண் குமார், மிதிலியிடன் 75 லட்ச ருபாய் பணம் தரும்படியும் இல்லையென்றால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆனால், நடிகை மைதிலி பணம் தர மறுக்கவே, மைதிலி தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கிரண் குமார் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கிரண் குமாரை போலீசார் கைது செய்தனர்.