3 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் இயக்குனர் – 5 ஆண்டுகளுக்கு பின் என்ட்ரி கொடுக்கும் நதியா. ஹீரோ யார் தெரியுமா ?

0
926
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகை நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

- Advertisement -

இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பின் நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தார். பல ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் நடிகை நதியா அவர்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறார்.

இறுதியாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நதியா, தற்போது லிங்குசாமி இயக்கும் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இறுதியாக 2018-ம் ஆண்டு விஷால் நடித்த ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement