எம் குமரன் s/o மஹாலக்ஷ்மி ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில Unseen புகைப்படங்களை வெளியிட்ட நதியா.

0
33959
nadhiya
- Advertisement -

குடும்ப பாசம், சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படங்கள் அதிக அளவில் ரசிகர்களிடம் லைக்ஸ் குவிக்கும். அது எல்லா மொழி திரைப்படங்களுக்குமே பொருந்தும். 2003-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அம்மா நானா ஒ தமிழா அம்மாயி’. இதில் ஹீரோவாக ரவி தேஜா நடித்திருந்தார். அவருக்கு அம்மாவாக ஜெயசுதா நடித்திருந்தார். இப்படம் மெகா ஹிட்டானது. ஆகையால், இப்படம் தமிழ் (M.குமரன் S/0 மகாலக்ஷ்மி), கன்னடம் (மௌர்யா), ஒடியா (கத தீதிலி மா கு), போஜ்புரி (ஜிகர்வாலா) என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

ரீமேக் செய்யப்பட்ட படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் தமிழில் வந்த ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல். காரணம்.. நடிகை நதியா தான். சில மலையாள படங்களில் நடித்த நதியா, தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படம் ‘பூவே பூச்சூடவா’.

இதையும் பாருங்க : பாப் கட், மாடர்ன் லுக். அடையாளம் தெரியாதபடி மாறியுள்ள சிவா மனசுல சக்தி பட நடிகை.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து “மந்திர புன்னகை, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன்” என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நதியா நடித்தார். அதன் பிறகு பல வருடங்கள் நதியா படங்களில் நடிக்காமல் இருந்தார். 2004-ஆம் ஆண்டு வந்த ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ படம் மூலமாக தான் மீண்டும் நடிகை நதியா ரீ-என்ட்ரியானார்.

இந்த படத்தில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். ‘ஜெயம்’ ரவியின் அம்மா கேரக்டரில் நதியாவும், அப்பா கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர்.இந்த படத்தை பிரபல இயக்குநரும், ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் நதியா வரும் அனைத்து காட்சிகளும் பெரிதாக பேசப்பட்டது. படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகம் இருந்தமையால், இன்றும் இந்த படம் நம் மனதில் இருந்து நீங்கவில்லை.

இதையும் பாருங்க : முகநூலை ஹேக் செய்த நபர்கள். மார்ப் செய்து வெளியிட்ட புகைப்படம் என்று அனுபமா வெளியிட்ட ஆதாரம்.

-விளம்பரம்-

சமீபத்தில், நடிகை நதியா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் என்ட்ரியானார். தற்போது, ‘M.குமரன் S/0 மகாலக்ஷ்மி’ படத்தின் ஸ்டில்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மேலும், இந்த படம் தன் திரையுலக பயணத்தில் செகண்ட் இன்னிங்க்ஸாக அமைந்த படம்.. ஆகையால், தனக்கு இது ரொம்பவும் ஸ்பெஷலான படம் என்று நதியா தெரிவித்துள்ளார்.

Advertisement