நதியாவின் மகள்களா இது. இப்படி வளந்துட்டாங்க. ஒரு பொண்ணு அச்சு அசலா நதியாவே.

0
1747
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகை நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

இதையும் பாருங்க : படுக்கையில் உள்ளாடை தெரியும் அளவு படு கிளாமர் போட்டோ ஷூட் – ரெஜினாவா இது.

- Advertisement -

இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பின் நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்து உள்ளார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் நடிகை நதியா அவர்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறார். அப்பொழுது பார்க்கும் போது நடிகை நதியா அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படியே இப்பவும் காட்சி அளிக்கிறார். இவருடைய அழகை பார்த்து பல பேர் நீங்கள் இன்னும் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு இப்போது இருக்கும் நடிகைகளின் அழகுக்கு மிஞ்சும் அளவுக்கு நதியா உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா அவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை நதியா அவர்கள் தன் குடும்பத்தினருடன் ஜப்பான் சென்று வந்த போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ‘நீங்க கஷ்டபட்டு கட்டின வீட்டை காமிங்க’ – ரசிகர் கேட்டதால் தனது வீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட சித்ரா.

அதில் தன் மகள்களோடு இருக்கும் புகைப்படங்களும் உள்ளன. முதன் முதலாக நடிகை நதியா அவர்கள் தன் மகள்களோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதுவரை தன்னுடைய மகள்களை வெளியுலக்குக்கு காட்டாமல் இருந்தார் நதியா என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக நடிகை நதியா அவர்கள் தன்னுடைய மகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதில் ஒரு மகள் அச்சு அசலாக நதியாவை உறித்து வைத்திருக்கிறார்.

Advertisement