விஜய் டிவி மூலம் வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், ரொபோ ஷங்கர் என பல நடிகர்கள் சினிமால் ஜொலித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் பிரியா பாவானி ஷங்கர் கூட விஜய் டிவி யில் கிடத்த புகழின் மூலம் சினிமாவில் கதாநாயக பயணிக்க ஆரம்பித்தார்.
ஏற்கனவே சீரியலில் நடித்த போது பல இல்லதரசிகளின் ரசிகர் பட்டாளத்தை கொண்ட பிரியா, மேயாத மான் படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டங்கள் சேர்ந்து விட்டனர். அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வருகின்றனர்.தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் என்ற இயக்குனர் நடிகர் எஸ். ஜே. சூர்யாவை வைத்து எடுக்க போகும் புதிய படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளாராம் ப்ரியா. இந்த படத்திரக்கான ஷூட்டிங் ஜனவரி மாதமே தொடங்க இருந்த நிலையில் தற்போது நிலவிவரும் தமிழ் சினிமா துறை ஸ்டரைக்கால் நிறுத்தப்பட்டுள்ளதாம் .ஸ்டரை க் முடிந்த அடுத்த கணமே இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க பட்டு விடும் என்று எதிர்பார்க் கபடுகிறது.