நடிகை ரம்பா சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா, 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
நடிகை ரம்பாவுக்கு ஏற்கனவே லான்யா என்ற 7 வயது மகளும், 3 வயதில் ஷாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை ரம்பா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் மற்றொரு குழந்தைக்கு அம்மாவாக போவதாகவும் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: வாணி ராணி’ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது! அதிர்ச்சியில் சீரியல் குழு! புகைப்படம் உள்ள
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ரம்பா, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக் கொண்டாராம். ஆனால் அந்த பாடல் நீண்ட மாதங்களாக எடுக்காமல் இருந்து வந்ததாம். இதனால் சமீபத்தில் அந்த பாடலுக்கு நடனமாட படக்குழுவினர் நடிகை ரம்பாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதால் அந்த பாடலுக்கு நடமாட முடியாது என்று நோ சொல்லி இருக்கிறார் நடிகை ரம்பா.