சும்மா வந்து போனா பத்தாது,அதை செய்யணும் – பிரதமர் மோடியை விமர்சித்த நடிகை ரோகினி.

0
139
- Advertisement -

பிரதமர் மோடியை விமர்சித்து நடிகை ரோகிணி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பிரதமராக இருப்பவர் மோடி. இவர் கடந்த 19ஆம் தேதி தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்தார். அப்போது அவர் சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்திருந்தார். இதனை அடுத்த இரண்டு நாட்களில் மோடி அவர்கள் திருச்சி, இராமேஸ்வரம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார்.

-விளம்பரம்-

குறிப்பாக, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்து முடித்து 22 திருத்தங்களில் பிரதமர் மோடி நீராடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பலருமே, இந்த பயணம் மோடியின் தனிப்பட்ட முறையில் ஆனதா? அலுவல் ரீதியானதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதும் நெகட்டிவான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

- Advertisement -

நடிகை ரோகிணி பேட்டி:

அந்த வகையில் இந்த முறையுமே பிரதமர் வருகை குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இந்த நிலையில் பிரதமர் வருகை பிரதமர் மோடியின் வருகை குறித்து நடிகை ரோகிணி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தான் விஜயம் செய்கிறார். இப்படி வந்து போனாலாவது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் போல. சும்மா வந்து பார்த்துட்டு விட்டுப் போனால் மட்டும் பத்தாது.

modi

மோடி குறித்த விமர்சனம்:

மாநிலத்திற்கு தேவையானதை செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி நடிகை ரோகினி மோடியை விமர்சித்து பேசி இருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு பாஜகவின் தரப்பில் இருந்து பலருமே எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரோகினி. இவர் ஆரம்பத்தில் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ரோகிணி திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகை மட்டும் இல்லாமல் எழுத்தாளர், செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவின் வில்லன் ரகுவரனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.

ரோகிணி குடும்பம்:

பிரிவிற்கு பின் ரோகிணி தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை இவர் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய நடிப்பிற்காக ரோகினி அவர்கள் தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். தற்போதும் இவர் படங்கள், சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் . அந்த வகையில் கடைசியாக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் வெளியாகி இருந்த தண்டட்டி படத்தில் ரோகிணி நடித்து இருந்தார்.

Advertisement