நீ நல்லவன்னு நிரூபிக்க வேண்டிய நேரத்துல இப்படி பண்ற – ரஜினியை விளாசிய காரணம் குறித்து சொன்ன ரோஜா.

0
367
- Advertisement -

தவறான மனிதர்களுக்கு ரஜினி சப்போர்ட் செய்கிறார் என்று ஆவேசமாக நடிகை ரோஜா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஜா ஆபாச படத்தில் நடித்தார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சட்டசபையில் அவருடைய சிடிகள் காட்டப்பட்டிருந்தது. இது குறித்து தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் ரோஜாவை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து நடிகை ரோஜா அவர்கள் தன்னுடைய வீட்டில் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் சீடிக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த சீடியில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது.

- Advertisement -

ரோஜா அளித்த பேட்டி:

என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது. உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, லோகேஷ் ஆகியோர் இது தொடர்பாக கண்டிக்காதது ஏன்? சந்திரபாபு நாயுடு என்னை பிரச்சாரத்திற்கு அழைத்தது ஏன்? நான் கெட்டவள் என்றால் என்னை ஏன் கட்சியில் சேர்த்தார்? என்னை அயர்ன் லெக் என்று கேலி செய்தார்கள்.

பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி கைது:

நான் உங்கள் கட்சியில் இருக்கும்போது நல்லவராகவும் வேறு கட்சியிலிருக்கும் போது கெட்டவராகவும் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி என்னை பற்றி தவறாக பேசியது என்னை ரொம்ப புண்படுத்திருக்கிறது. தப்பை கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா? தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து நடிகை ரோஜாவை அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருந்தார்.

-விளம்பரம்-

ரோஜா அளித்த பேட்டி:

இதை அடுத்து பலரும் நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், ரஜினிகாந்த் எதுவும் பேசாமல் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருப்பது போல் சிக்னல் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரோஜா, நான் உங்களுடைய சக நடிகை தானே, சினிமாக்காரர்கள் கேவலமானவர்கள், அப்படி இப்படி என்று அவர் பேசி இருக்கிறார். நீங்களும் சினிமாக்காரன் தானே, எங்களுக்கு சப்போர்ட் செய்யாமல் எதற்கு அவருக்காக நிற்கணும். நான் உண்மையிலேயே ஆபாச படங்களில், விபச்சாரம் செய்திருந்தால் நீங்கள் யாரும் சப்போர்ட் செய்ய தேவையில்லை.

ரஜினி குறித்து சொன்னது:

அவர் என்னைப் பற்றி தவறாக பேசும்போது குரல் கொடுக்க வேண்டாமா? ஒரு சக நடிகருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும்போது ஒரு துணையாக குரல் கொடுக்க வேண்டும் அல்லவா? சூப்பர் ஸ்டார் நண்பர்களுக்கு இப்படிப்பட்டவர், உதவி செய்வார், கை கொடுப்பார், ஆதரவு கொடுப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். சக நடிகர்களுக்கு எந்த ஒரு சப்போர்டுமே செய்யவில்லை. அவருடைய பிறந்தநாள், விழாக்கள் எதுவாக இருந்தாலும் வீடியோ செய்வது ,வாழ்த்துக்கள் என்று நாங்கள் சக நடிகர்கள் செய்கிறோம். இதே சக நடிகருக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர் நிற்க மாட்டுகிறார். நல்லவர் என்று நிரூபிக்க வேண்டும் தருணத்தில் ரஜினி தவறானவர்களுக்கு சப்போர்ட் செய்கிறார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement