சாய் பல்லவி தனது பியூட்டி சீகரெட்டை பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின், கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்றுதான் ரசிகர்கள் அழைகிறார்கள். தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவி திரைப்பயணம்:
அதிலும், சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்த ‘விரத பருவம்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த படம் ‘கார்கி’. இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். சாய் பல்லவியுடன் காளி வெங்கட், ஆர். எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. குறிப்பாக இப்படத்தில் சாய்பல்லவி நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.
அமரன் படம்:
அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டு சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம் ஆகும். இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவியை அனைவரும் பாராட்டியிருந்தார்கள்.
தண்டேல்:
தற்போது சாய்பல்லவி தெலுங்கில் ‘தண்டேல்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் சந்தூ மொண்டேடி இயக்கி இருக்கும் இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இன்று பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகி உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.அந்த வகையில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
சாய் பல்லவி சொன்ன சீக்ரெட்:
தற்போது ‘தண்டேல்’ படத்தின் ப்ரமோஷனுக்காக சாய் பல்லவியிடம் நாக சைதன்யா சில வேடிக்கையான கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில், ஒரு கேள்வியாக உங்கள் சன் ஸ்கிரீன் ப்ராடக்ட் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார். அதற்கு சாய் பல்லவி, Helio Care, அதற்கு கூட ஆரஞ்சு கலர்ல கேப் இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் நான் அதை எப்போதாவது தான் பயன்படுத்துவேன். எனக்கு எப்போ ஞாபகம் இருக்கிறதோ அப்போதுதான் பயன்படுத்துவோம். இல்லை என்றால் வெறும் மாஸ்ட்ரைசர் மட்டும்தான் போடுவேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.