தமிழில் 2008 இல் கெளதம் வாசுதேவன் இயக்கியதில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த படத்திற்கு பின்னர் தமிழில் வெடி,வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜ்மன்றி என்ற பகுதியில் பிறந்த இவர் 2002 இல் வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்னும் இந்தி படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் ஹிந்தி, தெலுங்கு ,பெங்காலி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சமீரா ரெட்டி 2012 வரையில் ஒரு ஆண்டிற்கு சராசரியாக 3 படங்களிளாவது நடித்து வந்தார். அதுமட்டும் அல்லாமல் ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு பேஷன் ஷோவிற்கு ஆன்லைன் நடுவராகவும் இருந்து வந்தார். ஆனால், அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.
இதனை அடுத்து மும்பையை சேர்ந்த ஒரு பைக் கஸ்டமைஸ் தொழில் செய்யும் அக்ஷய் வர்டே என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு முன்னாள் ஜெட் ஏர் வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு சமீரா ரெட்டிக்கு 2015 இல் ஆண் குழந்தைக் ஒன்று பிறந்தது.தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பையில் வசித்து வருகிறார் சமீரா ரெட்டி. படங்களில் வசீகர தோற்றத்தில் இருந்த நடிகை சமீரா தற்போது அடையாளம் அநியாயத்திற்கு குண்டாக மாறியுள்ளார்.