தமிழில் கமலஹாசன் நடித்த “நாயகன்” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள பெரும்பாலான பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலாக இறந்தாலும் சரி, காமெடியான அம்மாவாக இருந்தாலும் சரி இவர் நடிப்பில் பட்டையை கிளம்பிவிடுவார். இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இவருக்கு முதன் முதலில் சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படம் இயக்குனர் சேரன் இயக்கிய “தவமாய் தவமிருந்து” படம் தான்.
2005 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சேரனின் பெற்றோர்களாக நடிகர் ராஜ்கிரணும், சரண்யாவும் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சேரனுக்கும், நடிகை சரண்யாவிற்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆனால், எதற்காக சண்டை வருமென்று தெரியாது என்று சரண்யா கூறியுள்ளார்.
படப்பிடிப்பின் போது அடிக்கடி சண்டை வந்ததால் சரண்யா பல முறை அழுத்திருக்கிறாராரம், ஒரு கட்டத்தில் தன்னிடம் சண்டையிடும் சேரனை அருவாள் எடுத்து வெட்டி கொலை செய்துவிடலாம் என்று கூட நினைத்ததாக காமெடியுடன் கூறியுள்ளார் நடிகை சரண்யா, ஆனால் அந்த படம் வெளியான பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்களாம்.