திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு ரசிகர்களால் தர்ம சங்கடத்திற்கு ஆளான ஸ்ரேயா.

0
328
Shriya
- Advertisement -

திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நடிகை ஸ்ரேயாவை மர்ம நபர் தொட முயன்றி இருக்கும் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும், இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்

- Advertisement -

ஸ்ரேயா திருமணம்:

இப்படி தொடர்ந்து படங்களில் நடித்த ஸ்ரேயாவுக்கு இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் ஸ்ரேயா திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் வெளிநாட்டிலே ஸ்ரேயா செட்டில் ஆனார். மேலும், திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஸ்ரேயா சினிமாவில் நடித்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, தனக்கு குழந்தை பிறந்து இருக்கு என்று திடீரென்று அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப என்று கொடுத்து இருந்தார்.

ஸ்ரேயா நடித்த படங்கள்:

ஸ்ரேயா கர்ப்பமாக இருப்பதை கூட அறிவிக்காமல் படு சீக்ரெட்டாக வைத்து குழந்தை பிறந்து பல மாதங்கள் கழித்தே அறிவித்தார். “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று இவருடைய மகளுக்கு பெயர் வைத்திருக்கிறார். தற்போது ஸ்ரேயா அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்திருந்த ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கன்னட மொழியில் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த படம் கப்ஸா. இந்த படத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ஆன உபேந்திரா, சுதீப் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரேயா நடிக்கும் படங்கள்:

இயக்குனர் சந்துரு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஸ்ரேயா சரண் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஸ்ரேயா அவர்கள் சண்டைக்காரி, நரகாசுரன் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவை மர்ம நபர் தொட முயன்ற சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நடிகை ஸ்ரேயா அவர்கள் திருப்பதி சென்று இருக்கிறார்.

மர்ம நபர் செய்த செயல்:

அங்கு அவரை ரசிகர்கள், மீடியாக்கள் என பலரும் போட்டோ எடுத்து இருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்ரேயாவிடம் புகைப்படம் எடுக்க வந்திருக்கிறார். ஆனால், அவரிடம் கேமரா எதுவும் இல்லாததால் ஸ்ரேயாவை தொட பார்த்து இருக்கிறார். பின் ஸ்ரேயா காருக்குள் இருந்து கேமராவை பாருங்கள் என்று சொல்லி அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement