தமிழ் சினிமாவில் 90ஸ் நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நீங்காத இடம் பிடித்த நடிகைகள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் 90ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை சித்தாரா.
1989 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சித்தாரா. 1973 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கிளிமனூர் என்னும் பகுதியில் பிறந்த இவர் சினிமாவில் எந்த ஒரு பின்பலமுமின்றி நுழைந்தவர்.
இயக்குனர் கே பாலசந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம்மேலும், என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவர் தென்னிந்திய சினிமாவில் 60 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களை விட தமிழ் சினிமாவில் ஒரு பிரதான நடிகையாக திகழ்ந்து வந்தார் நடிகை சித்தாரா.
தமிழில் “புது புதுக்கு அர்த்தங்கள், புது வசந்தம்,புரியாத புதிர்” போன்ற பல படங்களில் நடித்துள்ள சித்தாரா ஒரு சில சொற்ப படங்களில் மட்டுமே நடித்துள்ளார். சித்தாரா திருமணத்திற்கு பின்னர் 2 மகள்கள் ஒரு மகனுக்கு தாயானார். அதன் பின்னரும் தொடர்ந்து நடித்து வந்த சித்தாரா , தற்போது ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘