தற்போது சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியின் முக நூல் பக்கத்தில் வி ஜெய் கார்த்திக் இராவணன் என்ற முகநூல்வாசி ஒருவர் "இத்தனை ஆண்களுடன் இருந்திருக்கிறீர்களே உங்களுக்கு இன்னும் ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படவில்லையா? " என்று சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
இதற்க்கு பதிலளித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி "உங்கள் அக்கரைக்கு நன்றி மிஸ்டர்.ஜெய் ..உங்களுக்கு ஆனுறை பற்றி தெரியாது என்று நான் நினைக்கிறேன். எனக்கு உடலுறவு குறித்து சிறந்த அறிவு இருக்கிறது. என்னை பாதுகாத்துகொள்ள எனக்கு தெரியும். நான் 4 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வேன். நான் வசதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால், எனக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கிறது.
நான் யோகாசனம் செய்து என்னுடைய உடலை நான் ஆரோக்யமாக தான் வைத்து வருகிறேன். உங்களுக்கு ஹெச்.ஐ.வி வர வேண்டும் என்று அவசியமில்லை கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் உங்களின் கிண்டல்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். பத்திரமாக இருங்கள் " என்று பதிவிட்டுள்ளார்.




