இறப்பதற்கு முன்பாக தனது கோடிக்கணக்கான சொத்துக்களை ஸ்ரீதிவ்யா என்ன செய்தார் தெரியுமா ?

0
34977
sridivya
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1970 களில் தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை நடித்த பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா. இவர் சினிமா திரை உலகில் புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் பிரபலமான கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும் ஆவார். மேலும், ஸ்ரீவித்யா அவர்கள் 2003 ஆம் ஆண்டு மார்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அநியாயமாக இறந்தார். மேலும்,ஸ்ரீவித்யா மரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதிவைத்தார். ஆனால், அப்படி நடிகை ஸ்ரீவித்யா எழுதி வைத்து எல்லா சொத்துக்களும் ஏழை குழந்தைகளுக்கு போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஸ்ரீவித்யா அவர்கள் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சோகங்களை தாங்கி கொண்டவர்.

-விளம்பரம்-
Image result for ஸ்ரீவித்யா"

மேலும்,நடிகை ஸ்ரீவித்யா தனது 39 வயதிற்கு பின்னர் அவருடைய திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. பின் விதி வாழ்க்கையில் விளையாடும்’ என்று சொல்வார்களே அது ஸ்ரீவித்யா வாழ்க்கையில் உண்மையானது. அப்போது தான் ஸ்ரீவித்யா அவர்கள் வாழ்க்கையில் சறுக்கி விழ தொடங்கினார். பின்னர் மண வாழ்க்கை முடிந்து ஸ்ரீவித்யா பல காலமாக தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர் பெற்றோர்கள்,சொந்த உறவினர்கள் இல்லாமல் தனிமையில் அனாதை போல் வாழ்ந்து வந்தார் ஸ்ரீவித்யா. மேலும்,முறையான கவனிப்பு இன்றி,பாசத்திற்கு ஏங்கி தவிக்கும் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்தார் ஸ்ரீவித்யா. இப்படி பல கொடுமைகளை அனுபவித்து வந்தாலும் காலம் அவருக்கு கொடுத்த பரிசு புற்றுநோய். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல துன்பங்களையும்,கஷ்டங்களையும் அனுபவித்து தவித்து வந்தார்.

இதையும் பாருங்க : தனது பிறந்தநாளன்று இப்படி ஒரு கொடுமை. சுஜித் அம்மாவிடம் லாரன்ஸ் வைத்த வேண்டுகோள்.

- Advertisement -

பின்னர் அவருடைய வாழ்க்கையே சூனியமாக போனது போல நினைத்தார். பின் நடிகை ஸ்ரீவித்யா தனிமையிலும், பாசத்திற்கும் ஏங்கும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வந்தார். மேலும்,ஸ்ரீவித்யா வீட்டுக்குள்ளே ஜெயிலில் வாழும் கைதி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஸ்ரீவித்யா தன் வாழ்நாளில் முழுவதும் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் என்ன? செய்வது என்று யோசித்தார். பின் இறப்பதற்கு முன்னாடியே வசதி இல்லாமல், ஆதரவு இல்லாமல்,கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஏழைக் குழந்தைகளின் வாழ்வு எதிர்காலத்தில் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி கொடுத்தார். மேலும்,ஸ்ரீவித்யா இந்த சொத்துக்களை எல்லாம் நம்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர் நினைத்த காரியம் துளிகூட நிறைவேறவில்லை.

Image result for ஸ்ரீவித்யா"

ஒரு ஏழை குழந்தைகளுக்கு கூட போய் சேரவில்லை என்பது துக்கமான செய்தி வெளியே வந்தது.அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீவித்யா தன்னுடைய மரணப்படுக்கையில் இருந்தபோது வசதியற்றவர்களுக்கு என்னுடைய சொத்துக்களை கொடுங்கள் என்ற உன்னதமான நல்ல உள்ளம் கொண்டவர். அவரை மாதிரி ஒரு மனது யாருக்கும் வராது என்று தெரிவித்தார்கள். இப்படி நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்வில் இப்படி ஒரு சோகங்களா! என்று நெட்டிசன்கள் கூறினார்கள். மேலும், இவருடைய நல்ல இதயத்திற்கு வேறு எதுவும் ஈடாகாது என்றும் தெரிவித்தார்கள். ஆனால், இவர் இப்படி பாடுபட்டு கொடுத்த சொத்துக்கள் எல்லாம் ஏழை மக்களுக்கு போய் சேரவில்லை என்ற வருத்தம் உள்ளது என இணையங்களில் கூறுகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீவித்யா அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய கடைசி ஆசையே அவருடைய சொத்துக்கள் எல்லாம் ஏழை எளிய குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என்பது தான். இது நிறைவேறுமா?இல்லையா? என்பது தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement