அவர் மேல எனக்கு மரியாத இருக்கு ஆனா, அன்னிக்கி ஏன் என்கிட்ட அப்படி பண்ணார்னு தெரியல – கவுண்டமணி குறித்து விசித்ரா

0
444
- Advertisement -

படப்பிடிப்பின் போது கவுண்டமணியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகை விசித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த பொற்கொடி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் கவுண்டமணி- செந்தில் உடன் சேர்ந்து பல காமெடி மற்றும் கவர்ச்சி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். பின் இவர் ஹோட்டல் மேனேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு விசித்ரா சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். பின் கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7:

இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி இருந்தார். அதற்கு பின்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சீனியர் நடிகர், நடிகைகள் வந்தாலே சில வாரங்களில் வெளியேறி விடுவார்கள். ஆனால், விசித்ரா தாக்கு பிடித்துக் கொண்டு பயங்கரமாக விளையாடி இருந்தார். ஒரு சீனியர் நடிகைக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா:

மேலும், ஆரம்பத்திலிருந்து விசித்திராவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. அதோடு பூகம்பம் டாஸ்க் ஒன்றில் இவர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறி இருந்தது பலருக்குமே வேதனை அளித்து இருந்தது. அதில் அவர் தனக்கு சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விசித்திரா அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து கூறியது, நடிகர் கவுண்டமணியோடு நான் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

விசித்திரா பேட்டி:

எங்கள் இருவருக்கும் இடையில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு முறை பெரிய குடும்பம் என்ற படத்தில் நடிக்க இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். அந்த படத்தினுடைய பூஜையிலும் நான் கலந்து கொண்டேன். அப்போது கே எஸ் ரவிக்குமார் சார், என்னிடம் வந்து கவுண்டமணி சாருக்கு ஒரு வணக்கம் சொல்ல வேண்டும் என்று சொன்னார். உடனே நான், எதற்காக என்று கேட்டேன். அதற்கு அவர், இல்லை நீ வந்து ஒரு வணக்கம் மட்டும் சொல்லு என்று அழைத்துச் சென்றார்.

கவுண்டமணி குறித்து சொன்னது:

நாம் நம்முடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம். இதற்கும் வணக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. இருந்தாலும், கே எஸ் ரவிக்குமார் சார் சொன்னதற்காக கவுண்டமணி சாருக்கு வணக்கம் சொன்னேன். அதைக் கேட்டவர், இப்போதான் வணக்கம் சொல்லுவீங்களா? என்று கேட்டார். அவர் ஏன் அப்படி பேசினார்? என்று இன்று வரை எனக்கு தெரியவில்லை. பொதுவாகவே அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால், சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கூறி இருந்தார்

Advertisement