அம்பானி வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராயின் மகள். இரண்டே மாதத்தில் இப்படி ஒரு மாற்றமா?

0
232
- Advertisement -

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது.

-விளம்பரம்-

தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. தற்போது திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

முகேஷ் அம்பானி மகன் திருமணம்:

அந்த வகையில் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது. அதோட இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்று இருந்தது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என்று பலர் வந்து இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், ராம்சரண், ரஜினிகாந்த், இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் மகளின் புகைப்படம்:

அந்த வகையில் இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், அமிதாபச்சன், அபிஷேக் பச்சன், ஆராத்யா என பச்சன் குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆராத்யாவின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஆராத்யாவிற்கு 12 வயது ஆகி இருக்கிறது. இதற்கு முன் இருந்த தோற்றத்தை விட தற்போது அவர் பார்ப்பதற்கு இளம் நடிகை போல் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

அது மட்டும் இல்லாமல் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தான் ஆராத்யா, தன் பள்ளியில் நடந்த டிராமா போட்டியில் கலந்துகொண்ட வீடியோக்களெல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது இருக்கும் ஆராத்யா புகைப்படம் பார்த்து ரசிகர்கள் பலருமே, இரண்டே மாற்றத்தில் இவ்வளவு மாற்றமா! என்றெல்லாம் வியப்பில் கமெண்டுகளை போட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement