அஜித் துக்க நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இது தான் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பிளாக்பஸ்டர் ஹிட்டையும் கொடுத்திருக்கிறது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் துணிவு.
இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இது ஒரு பக்கம் இருக்க பெரும்பாலுமே அஜித் அவர்கள் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும், பிரபலங்கள் தொடர்பான விழாக்களிலும், சொல்லப்போனால் துக்க நிகழ்வுகளில் கூட கலந்து கொள்வதில்லை. அந்த வகையில் சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
வலைப்பேச்சு அந்தணன் வீடியோ:
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். ஆனால், அஜித் வரவே இல்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் அஜித் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடி இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித் பிரபலங்களின் துக்க நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் குறித்து சொன்னது:
அதில் அவர், ஆச்சி மனோரமா இறப்பிற்கு பிறகு தான் அஜித் துக்க நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என்று
முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. காரணம், மனோரமா இறப்பிற்கு அஜித் தன்னுடைய மூட்டில் கட்டு போட்டு கொண்டு வந்திருந்தார். ஆனால், அவரைப் பார்த்து ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அவரை செல்ல முடியாத அளவிற்கு தொல்லை செய்து இருக்கிறார்கள். அதிலிருந்தே அஜித் பிரபலங்களின் இறப்பிற்கு செல்வதே கிடையாது.
அஜித்-ராஜ்கிரண் உறவு:
அதுமட்டுமில்லாமல் அஜித்தை பற்றி இன்னொரு முக்கியமான விஷயமும் உங்களுக்கு சொல்கிறேன். ஒரு காலத்தில் அஜித்தும் ராஜ்கிரனும் நெருங்கி பழகிக் கொண்டிருந்தார்கள். ராஜ்கிரன் குணத்தைப் பார்த்துதான் அவரிடம் அஜித் பழக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரை அப்பாவாகவே பார்க்கத் தொடங்கினார். அஜித் பொதுவாகவே எல்லோருடைய வீடுகளுக்கும் சென்று பழகுவது பிடிக்காது. ஆனால், அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டிற்கு மட்டும் உரிமையாக சென்று ஜாலியாக பேசி வருவாராம். அந்த பட்டியலில் ராஜ்கிரனும் இருந்தார்.
அஜித்-ராஜ்கிரண் பிரிவு:
அப்படித்தான் ராஜ்கிரனை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் உடனடியாகவே அஜித் படப்பிடிப்பிற்கு சென்று விடுவாராம். அந்த அளவிற்கு இருவருக்கும் உறவு இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரன் தன்னுடைய முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களை அடைத்து கொண்டு இருந்தார். அதோடு அஜித் போன்ற பெரிய நடிகர்கள் தனக்கு ஒரு படம் செய்து கொடுத்தால் கடனாய் அடைத்து விடலாம் என்று நினைத்து அஜித்திடம் ஒரு படம் செய்ய கேட்டிருக்கிறார் ராஜ்கிரண். அதோடு அஜித்தும் ராஜ்கிரன் உடனான தொடர்பை துண்டித்து விட்டார். காரணம், அஜித் தனக்கு நெருக்கமானவர்கள் தன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க கூடாது என்று நினைப்பார் என்று கூறியிருக்கிறார்.