செல்வராகவன் இயக்கத்தில் அஜித்தும்,தனுஷும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது – பிரபல நடிகர் சொன்ன ஷாக்கிங் உண்மை.

0
501
- Advertisement -

செல்வராகவன் படத்தில் தனுஷ்- அஜித் இணைந்து நடிக்க இருந்து தடைப்பட்ட காரணம் குறித்து பிரபல நடிகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக அஜித்- தனுஷ் விளங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமே ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆகவே அஜித் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத்குமார் இயக்கி போனி கபூர் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

அஜித் திரைப்பயணம்:

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. சில காரணங்களால் அவரால் இயக்க முடியாமல் போனது. மகிழ்ந்திருமேனி தான் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

தனுஷ் திரைப்பயணம்:

அதற்குப் பிறகு வெளிவந்த நானே வருவேன் படம் பெரியளவு வெற்றியடையவில்லை. கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்திருந்த படம் வாத்தி. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து தற்போது தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பரத் அளித்த பேட்டி:

இதனை எடுத்து நடிகர் தனுஷின் ஐம்பதாவது படத்தை அவரை இயக்கி நடிக்க இருக்கிறார். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனுஷ்- அஜித் இணைந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரால் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பரத் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், தனுஷ் உடைய சகோதரர் செல்வராகவன். அவர் தனுஷை வைத்து மூன்று படங்கள் இயக்கி இருந்தது அனைவரும் அறிந்தது.

தனுஷ்-அஜித் நடிக்க இருந்த படம்:

அவர் மீண்டும் தனுஷையும் அஜித்தையும் வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால், ஏதோ சில காரணங்களால் அந்த படத்தினுடைய பணிகள் தொடங்கும் முன்பே முடிவடைந்து விட்டது என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் எந்த படம்? என்ன காரணம் நின்று விட்டது? மீண்டும் தனுஷ்-அஜித் வைத்து படம் எடுக்க முயற்சி செய்யுங்கள்? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement