‘ஒரு பெண் காண்டம் வாங்குதில் என்ன தப்பு?’ என்று உலகநாயகன் மகள் அக்ஷரா ஹாசன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், வசனகர்த்தா, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர். தற்போது இவர் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படம் 2022ஆம் ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கமலுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் தெரிந்த விஷயமே.
இதையும் பாருங்க : அப்போ சூர்யா, இப்போ கார்த்தி. 16 ஆண்டுகளுக்கு பிண மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை – (இவங்கள பிடிக்காதவங்க இருப்பாங்களா ? )
கமலின் இளைய மகள் :
கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஸ்ருதி ஹாசன் போலவே அவரது தங்கையான அக்ஷரா ஹாசனும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியில் அக்ஷரா நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் அக்ஷரா சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் அக்ஷரா நடித்திருந்தார்.
அக்ஷரா ஹாசன் நடித்த படங்கள் :
பின் இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. இறுதியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான் திரைப்படத்தில் அக்ஷரா நடித்திருந்தார். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் அக்ஷரா நடித்து வருகிறார். இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் பிங்கர் டிப் என்ற வெப் சீரிஸ் தொடரிலும் நடித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அக்சரா ஹாசன் அவர்கள் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
காண்டம் குறித்து அக்ஷரா அளித்த பேட்டி:
இந்த படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ஊடகமொன்றிற்கு அக்ஷரா ஹாசன் பேட்டி அளித்து இருந்தார். அப்போது இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கடையில் ஆணுறை வாங்குவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அக்சராஹாசன் கூறியிருப்பது, ஒரு பெண் தனியே கடைக்கு சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அதில் தவறு ஒன்றுமில்லை.
சர்ச்சையாகும் அக்ஷரா பேசிய வீடியோ:
நீங்கள் பாதுகாப்பாக செய்கிறீர்கள். ஒழுங்காகச் நடக்கிறது என்று தான் அர்த்தம். அதில் என்ன பிரச்சினை? மேலும், இங்கே பெண்கள் செக்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது என்றும் பெண்களும் மனிதர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். இப்படி அக்ஷராஹாசன் காண்டம் குறித்து அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.