தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து பின்னர் நடிகராகவும் இயக்குனராகவும் தனக்கென்று ஒரு அந்தஸ்தை வைத்திருப்பவர் ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா தொடர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
சமீபத்தில் இவர் இயக்கி நடித்து வெளியான காஞ்சனா 3 திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ராகவா லாரன்ஸ் இதுவரை தமிழ் தெலுங்கு போன்ற திரைகளில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் டான் மற்றும் ரெபெல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதையும் படியுங்க : நீங்க ரெண்டு பேரும் ஓரின சேர்க்கையாளரா.! சங்கடத்திற்கு உள்ளான வைஷ்ணவி.! ஏன் ?
இந்த நிலையில் தற்போது இந்தியில் இயக்குனராக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரது இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான காஞ்சனா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தை தற்போது அக்சய் குமாரை வைத்து ஹிந்தியில் இயக்கவுள்ளார் லாரன்ஸ்.
தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் சரத் குமார் ஒரு திருநங்கையாக நடித்திருப்பார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இந்தியில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் தனது 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை திருநங்கை கத்பாத்திரத்தில் நடித்ததே இல்லை என்பது குறிப்பிட்டதக்கது.