‘சீரியலில் ரொமான்ஸ் சீனை பார்த்துவிட்டு சஞ்சீவின் ரியாக்ஷன்’ – மனம் திறந்த ஆல்யா மானஸா

0
2149
- Advertisement -

சீரியலில் ஆல்யா ரொமான்ஸ் செய்வது குறித்து அவருடைய கணவர் சஞ்சீவ் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா மானசா. அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அதோடு சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா குடும்பம்:

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இனியா சீரியல்:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் விடியோக்கள் எல்லாம் இணையத்தில் பயங்கர வைரலாகி இருக்கிறது. மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் கதாநாயகியாக கமிட்டாகி ஆல்யா நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆல்யா அளித்த பேட்டி:

இந்த தொடர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் இனியா- விக்ரம் இருவரும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்கிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் வீடியோக்கள் வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஆலியா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

சஞ்சீவ் குறித்து சொன்னது:

அதில் அவர் தன்னுடைய கணவர் சஞ்சீவ் குறித்து கூறியிருந்தது, நான் சீரியலில் என்னுடைய நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை என் கணவர் பார்ப்பார். பார்த்து விட்டு, என்ன பண்ணிட்டு இருக்கீங்க சீரியலில் என்று கேட்டு ஒரு லுக்கு விடுவார். மற்ற கணவர் போல தான் என்னுடைய கணவரும் பொசசிவ். இருந்தாலும், அவர் ரொம்ப நல்ல கணவன் என்று சிரித்துக்கொண்டேன் பதில் அளித்திருக்கிறார்.

Advertisement