நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விளங்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகை அமலா பால் பல கோடி கொடுத்து வாங்கிய தனது மெர்சிடிஸ் காரை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அமலா பால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த காரை வாங்கி இருந்தார். 1 கோடி மதிப்புள்ள அந்த காருக்கு ரூ. 20 லட்சம் வரி கட்ட வேண்டும்.
இதையும் பாருங்க : மகள்களுக்காக தான் வாழ்கிறேன் என்று அழுத சேரன்.! ஆனால், மகளால் அவர் பட்ட கஷ்டம்.!
ஆனால், அமலா பால் அந்த காரை புதுச்சேரியில் பதிவு செய்தார். புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவுசெய்ய முடியும். அமலாபாலின் மெர்சிடெஸ் கார், புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்துவரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இப்படி அந்த சொகுசு கார் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கினார் அம்லா பால். இந்த நிலையில் அந்த காரை விற்றுவிட்டதாக கூறிய அமலா அந்த கார் என்னுடைய ஈகோவை ஊட்டி வளர்கிறது, அதனால் தான் அதை விற்றேன். இப்போது மாதம் 20 ஆயிரம் ருபாய் மட்டுமே செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்கு சென்றாலும் சைக்கிளில் தான் பயணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.