கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரவண்குருச்சி தொகுதியில் தனது வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், சிதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் கோட்சே என்றார்.
மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக பேசிய கமல், சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாகவும் கூறியிருந்தார்.
இதையும் படியுங்க : செல்பி எடுக்க ஓடிவந்த ரசிகை.! மொக்கை வாங்கிய பாகுபலி நடிகை.!
Read more at:
கமலின் இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது நடிகர் நடிகைகள் கூட கமலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் டிவி சீரியல் புகழ் அமித் பார்கவும் தன் பங்கிற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்கள்மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் அமித் பார்கவ்.