சமீப காலமாக சினிமாத்துறையில் பிரபலங்களின் தற்கொலை சம்பவங்கள் சற்று ஓய்ந்திருந்தது.ஆனால் சின்னத்திரையில் அப்படி இல்லை,தற்கொலைக சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.தற்போது தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சின்னத்திரை தொகுப்பாளினி ராதிகா ரெட்டி என்பவர் v6 என்ற தொலைகட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியற்றிவந்தர்.36 வயதாகும் இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆகிவிட்டது.மேலும் இவருக்கு 14 வயதுள்ள ஒரு மகனும் இருக்கிறார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டார். தற்போது ஆந்திர மாநிலம் மூஸா பட் என்ற பகுதியில் வசித்து வந்த ராதிகா நேற்று அவர் தங்கியிருந்த குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை ,எனது தற்கொலைக்கு எனக்குள் இருந்த அழுத்தமே காரணம்,என்னை நானே கொலை செய்துகொண்டேன் என்று கடிதத்தை எழுதிவைத்துள்ளார்.மேலும் இந்த தற்கொலை குறித்து ஆந்திரா சைதிராபாட் போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.