சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போலிசாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.
மேலும், விசாரணையில் அவர் மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்துவந்துள்ளதாக வாக்குமூலமும் அளித்துள்ளார். இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார், ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவியும், பிரபல கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்னர் அவரும் காலமானதை தொடர்ந்து தற்போது இதனை அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதையும் பாருங்க : மொதல்ல இந்த நபரை விசாரியுங்கள். PSBB பள்ளியை தோலுரித்த குட்டி பத்மினி – வைரலாகும் வீடியோ.
சமூக ஊடகங்களில் ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகள் மதுவந்தியும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த பள்ளியில் தாங்கள் வெறும் ட்ரஸ்டி மட்டும் தான் என்றும் தாங்கள் இந்த பள்ளியை நடத்தவில்லை என்றும் ஒய் ஜி மகேந்திரனும் மதுவந்தியும் கூறி இருந்தனர். அதே போல PSBB பள்ளி நிர்வாகத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் PSBB பள்ளியின் பழைய விளம்பர வீடியோக்களை கூட தோண்டி எடுத்து அதனையும் ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் நடித்துள்ள அந்த பெண் வேறு யாரும் இல்லை பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் அக்கா வைஷ்ணவி தான்.மேலும், அனிருத் குடும்பத்தினர் ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.