இன்றிலிருந்து செய்திகளில் வர மாட்டேன். ஆனால், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எடுத்த அதிரடி முடிவு.

0
3394
anitha
- Advertisement -

பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘காப்பான்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், அனிதா சம்பத் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : லாக் டவுன் : ரஜினி பட ஹீரோயின் வீட்டில் பார்ட்டி? போலீஸார் அதிரடி சோதனை. புகார் அளித்த வாட்சமேனிடம் வாக்கு வாதம்.

- Advertisement -

அந்த பதிவில் “கொரோனா பரவி வரும் வேகம் அதிகரித்து உள்ளதால்.. well wishers request படி.. வீட்டில் உள்ளோர் நலன் கருதி இன்றில் இருந்து 10 நாட்களுக்கு சிறு விடுப்பு எடுத்துள்ளேன்.. 10 நாட்களுக்கு செய்திகளில் வர மாட்டேன்.. சும்மா ஒரு முன் எச்சரிக்கை தான்.. கொஞ்சம் மிஸ் பண்ற மாதிரி தான் இருக்கு.. என்ன பண்றது.. நீங்களும் பத்திரமா இருங்க..

அதுவரை தினமும் காலை 11 மணிக்கு யூ டியூபில் சந்திப்போம்” என்று செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அனிதா சம்பத் தெரிவித்திருக்கிறார். ‘அனிதா சம்பத் Vlogs’ என்ற யூ டியூப் சேனலில் தொடர்ந்து பல சுவாரஸ்யமான வீடியோக்களை அனிதா சம்பத் வெளியிட்டு வருகிறார். அனிதா சம்பத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : எப்படி இருந்த ஷாருக்கான் அலுவலகத்தை எப்படி கொரோனா வார்டாக மாற்றியுள்ளார்கள் – மனைவி வெளியிட்ட வீடியோ.

-விளம்பரம்-

இப்போது நடிகையாக ‘மாஸ்டர்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் அனிதா சம்பத். இதில் கதையின் நாயகனாக ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ். மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement