பா.ஜ.க அப்படி சொல்லுச்சா? இந்த மார்க்கெட் இல்லாத இயக்குனர்கலாம் – ரஞ்சித்துக்கு அண்ணாமலை பதிலடி.

0
380
- Advertisement -

ராமர் கோவில் குறித்து ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. பெரும்பாலும் இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்ட பா ரஞ்சித், இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்ற வில்லை என்றால் கூட எல்லோரும் தீவிரவாதிகள் தான். அந்தளவுக்கு பயங்கரமாக தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்று பயம் இருக்கிறது. பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை சரி செய்வதற்கும் நம் மனதை பண்படுத்துவதற்கு நம் மூலையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அளிக்கும் கருவியாக இந்தக் சினிமா கலையை பயன்படுத்தி வருகிறோம்.மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியது இந்த சினிமா தான். நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் இருந்து தள்ளிவிடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்க முழுக்க செய்வோம் என்று பேசி இருந்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஞ்சித், இன்று இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அதற்கு பின்னிருக்கும் மத அரசியலை தான் கண்டிக்கிறேன். பிரபலங்கள் பலரும் கோயிலுக்கு செல்வது அவரவர்கள் விருப்பம். அதை நான் குறை கூறவில்லை. அதற்கு பின்னால் நடக்கும் மதவாதத்தையும், பிற்போக்கு தன்மையையும் தான் கண்டிக்க வேண்டும். இதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அண்ணாமலை யிடம் ரஞ்சித்தின் இந்த பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

இதுகுறித்து பதில் அளித்த அவர் ‘ சிலபேர் அட்டேன்ஷனுக்காக பேசுகிறார்கள். அண்ணாமலை பற்றி பேசினால் ஃபேமஸ் ஆகிவிடலாம். பாஜக பற்றி பேசினால் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார்கள. அவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. மார்க்கெட் இல்லாத நடிகர்களையும் மார்க்கெட் இல்லாத இயக்குநர்களையும் பற்றி பேசி அவர்கள் மார்க்கெட்டை நாங்கள் ஏன் ஏற்றிவிட வேண்டும்? 1952ல் இருந்து எங்களின் கொள்கை தெளிவாக உள்ளது.

அனைத்து மக்களையும் இணைத்து அறநெறியில், தர்ம வழியில் ராமர் கோவிலை எழுப்புவோம் என்பததான் எங்களின் வார்த்தை. பா ஜ க ஆட்சியில் இருந்த போதும் இத்தனை ஆண்டுகள் நீதிமன்ற தீர்ப்பிற்காக அறவழியில் காத்திருந்த இந்த கோவிலை கட்டி முடித்து இருக்கிறோம். இந்த கோவிலை அரசாங்கம் கட்டவில்லை. ஒவ்வொரு இந்தியர்கள் கொடுத்த காசில் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Advertisement