நோயால் இப்படி ஆகிட்டேனா? அடையாளம் தெரியாத அளவு மாறிப்போய்யுள்ள அண்ணாமலை சீரியல் நடிகை சொன்ன காரணம்.

0
526
- Advertisement -

தொலைக்காட்சி தொடர்களில் கொடி கட்டி பறந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் அண்ணாமலை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சியமான சீரியல் நடிகையாக திகழ்ந்தவர் இவர். இவளெல்லாம் ஒரு பொண்ணா…ச்சே” என்று தாய்மார்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக்கொண்டவர் சீரியல் நடிகை மஞ்சரி. தற்போது என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். அதற்கு முன், அவரைப் பற்றி ஒரு குட்டி பயோடேட்டா.நடிகை குட்டி பத்மினி மூலமா ‘உறவுகள்’ சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

-விளம்பரம்-

என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர்தான். இந்த சீரியலுடைய ஷூட்டிங் 50% சிங்கப்பூர்லயும், 50% இந்தியாவிலும் நடந்துச்சு. அதுதான் தமிழில் என்னுடைய முதல் சீரியல். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி சீரியலிலும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியலில் நடிச்சிருப்பேன்.

- Advertisement -

‘ஹேர்கட் பண்ணிருக்கேன். நீங்க பார்த்த மஞ்சரிக்கும், இப்போ பார்க்கிற மஞ்சரிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. முன்னாடி கொஞ்சம் குண்டா இருந்தேன். இப்போ கொஞ்சம் ஒல்லியாயிருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, என் அம்மாகூட கோயிலுக்குப் போய்ருந்தேன். அங்க என்னைப் பார்த்துட்டு ஒருத்தங்க ‘பழைய சீரியல் நடிகை மஞ்சரி மாதிரியே இருக்கீங்க ; நீங்க மஞ்சரி பொண்ணான்னு’ என்கிட்ட கேட்டாங்க.

அந்த அளவுக்கா தோற்றத்தில் மாறிட்டோம்னு நினைச்சு எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன்.முன்னாடி குண்டா இருப்பேன். பிறகு மெலிஞ்சிட்டேன். என்னை பார்க்கிறவங்க இவளுக்கு ஏதோ நோய் வந்துடுச்சு போலன்னு சொன்னாங்க. நோயாளி அதான் மெலிஞ்சிட்டான்னுலாம் பேசினாங்க. எனக்கு நடக்குறது ரொம்ப பிடிக்கும். நிறைய நடந்தேன். உடம்பு குறைக்கணும்னு நினைச்சேன்… கஷ்டப்பட்டு நடந்து நடந்தே குறைச்சேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement