இமைக்கா நொடிகள் பட வில்லன் மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் – காரணம் இந்த கிளாமர் புகைப்படம் தான்.

0
8083
- Advertisement -

சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதர்வா,ரஷிகண்ணா நடித்த இந்த படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் இந்தி நடிகர் அனுருங் கஷ்யப்.படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத் இருந்தனர். அதிலும் இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்துள்ள இந்தி நடிகர் அனுரங் காஷ்யப்ப கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-30.png

அனுரங் காஷ்யப்ப 90 காலகட்டத்தில் இருந்தே பாலிவுட் சினிமாவில் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் இந்தியில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் தமிழில் அறிமுமானது என்னவோ இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தான். அனுரங் காஷ்யப் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆர்த்தி பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கும் பின்னர் இவர்களு ஆலியா என்ற மகளும் பிறந்தார்.

இதையும் பாருங்க : தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடுன பாட்டு’னு சொல்லிட்டு பாடுங்க’னு தான் கேக்குறோம் – உணமையான கர்ணன் உருக்கமான பேட்டி.

- Advertisement -

2009 ஆம் ஆண்டு மனைவியை விவகாரத்து செய்தாலும் மகளை பாசமாக வளர்த்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அனுரங் காஷ்யப்பின் மகள் பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆலியாவின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆலியாவை கடுமையாக விமரித்து உள்ளனர்.

அதில் ஒரு சிலர் கற்பழிப்பு மிரட்டல்களை கூட விடுத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆலியா, கடந்த சில வாரமாக நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்னுடைய lingerie புகைப்படத்தை பதிவிட்ட பின்னர் நான் மிகவும் மோசமான இழிவான மற்றும் அருவருப்பான கருத்துக்களை பெற்று வருகிறேன். அந்தப் புகைப்படத்தைக் கூட நீக்கி விடலாம் என்று நினைத்தேன். மேலும் அவதூறான கருத்துக்களை புறக்கணிக்கவும் நினைத்தேன். ஆனால், உண்மை என்னவென்றால் இதை பற்றி நாம் பேச வேண்டும்.

-விளம்பரம்-

ஏனென்றால் இந்த வகையான கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களையும் (மற்றும் உலகின் பிற பகுதிகளையும்) ஒரு விதத்தில் அல்லது வேறு வழியில் பாதிக்கும் கற்பழிப்பு கலாச்சாரத்திற்கு பங்களிக்கின்றன.நம்முடைய நாட்டில் ஒரு பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட பின்னர் அவருக்காக மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் செல்வார்கள் ஆனால் ஒரு பெண் உயிரோடு இருக்கும்போதே அவளை பாதுகாக்க வேண்டும் என்றும் இது போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement