அசோக்செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணம் இனிதே நடைபெற்ற நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வது வழக்கமான ஒன்றுதான். பாக்யராஜ்-பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா, சினேகா- பிரசன்னா, சமீபத்தில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன். இவர்கள் வரிசையில் தற்போது அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இணைய இருகிறார்கள்.
கோலிவுட் முழுவதும் இவர்களுடைய காதல் குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் கதாநாயகனாக மாறினார். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே.
அசோக் செல்வன் நடித்த படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடித்திருந்த படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது அசோக் செல்வன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
#AshokSelvanWedsKeerthiPandian #AshokSelvan #KeerthiPandian pic.twitter.com/mmftfBLnxs
— FridayCinema (@FridayCinemaOrg) September 13, 2023
அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் காதல்:
இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும், இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் போதுதான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்களாக கூறப்படுகிறது.
அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம்:
அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் பா ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வருகிற செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள தகவல்கள் வெளியானது. திருநெல்வேலியில் உள்ள சேது அம்மன் பண்ணையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை இவர்களது திருமணம் நடைபெறதாக தகவல் வெளியானது.
#AshokSelvanWedsKeerthiPandian
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 13, 2023
நடிகர் #அசோக்செல்வன்
நடிகை #கீர்த்திபாண்டியன்
காதல் திருமணம் இன்று நடந்தது #AshokSelvan #Marriage #KeerthiPandian #AshokSelvanWedding @iamramyapandian
Congratulations @AshokSelvan @iKeerthiPandian pic.twitter.com/YiCF2Krzxh
திருமண புகைப்படங்கள் :
இப்படி ஒரு நிலையில் இன்று காலை அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திட்டமிட்டபடியே இவர்கள் திருமணம் சேது அம்மன் பண்ணையில் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.