முதல் முறையாக ‘ஆடியோ லான்ச் குறித்து பதிவிட்ட அஸ்வின்’ – மீண்டும் கலாய்க்கும் நெட்டிசன்கள். (இது இப்போ தேவை தானா ? )

0
605
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வந்த அஸ்வின் முதன் முறையாக ஆடியோ லான்ச்ஜ் பற்றி பதிவு ஒன்றை போட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்ட அஸ்வின் :

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பேசிய அவர், னக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க. கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று இவர் பேசிய பேச்சால் இவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர்.

- Advertisement -

வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட அஸ்வின் :

ஆனால், இதுகுறித்து விளக்கமளித்த அஸ்வின், தன் முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாவும், யாரையும் குறை சொல்ல அப்படி பேசவில்லை என்றும் கூறி இருந்தார். அஸ்வினின் இந்த பேச்சை பல சினிமா பிரபலங்களும் விமர்சகர்களும் விமரித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து இதுகுறித்து வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டார் அஸ்வின்.

அதில், இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று மிகவும் சோகத்துடன் தெரிவித்தார்.

-விளம்பரம்-

ஆடியோ லான்ச் குறித்து அஸ்வினின் முதல் பதிவு :

இப்படி ஒரு நிலையில் ஆடியோ விழா குறித்து முதல் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ள அஸ்வின் ‘இது மிகவும் நம்ப முடியாத ஒரு தருணம். அந்தக் குரல்கள் எல்லாம் இன்னும் எனக்கு கேட்கிறது. இது மிகவும் அருமையான ஒரு அன்பு. எல்லா புகழும் இறைவனுக்கே, மக்களின் அன்பால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த அஸ்வின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக கூறி வந்தாலும் நெட்டிசன்கள் பலர் இன்னமும் நீ திருந்தவே இல்லையா என்று அஸ்வினை கலாய்த்து வருகின்றனர்.

தள்ளிப்போன முதல் படம் :

என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் இந்த மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்வைத்து திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் தற்போது வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்தது. மேலும், இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின் ‘என்னுடைய முதல் படத்தின் முதல் காட்சிக்காக நான் பல நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன்.

பட ரிலீஸுக்கு காத்துகொண்டு இருக்கும் அஸ்வின் :

ஆனால், அது மீண்டும் தள்ளிப் போய்விட்டது. என்னிடம் மீதம் இருக்கும் அனைத்தையும் நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் வலிமையாக மீண்டு வந்து உங்களை மகிழ்விக்க வேலை செய்து வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் திரையரங்கில் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன். விதியை நம்புகிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், இந்த படத்தின் வெளியீடு பற்றி இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.

Advertisement