தமிழில் தனுஷ் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘அசுரன்’. இந்த அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து இருக்கிறார் மஞ்சு வாரியர். தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மலையாள திரையுலகம் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடிகை மஞ்சு வாரியர் முதலில் சில விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மேலும், ஒரு சில சீரியல்களில் கூட நடித்து வந்தார் மஞ்சு வாரியார். தற்போது 41 வயதாகும் மஞ்சு வாரியார் இது வரை நடித்தது எல்லாமே குடும்பபாங்கான கதாபாத்திரம் தான். இந்த நிலையில் மஞ்சு வாரியார் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பாருங்க : சன் டிவியின் பிரபல சீரியலில் வனிதா. சீரியல் ஜோடியாளுடம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.
அசுரன் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த மஞ்சு வாரியார் தான் 96 படத்தில் நடிக்க முதலில் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தாராம் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், மஞ்சு வாரியரை தொடர்பு கொண்டு பேச பலமுறை முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. அதற்குப் பின்னர்தான் நடிகை த்ரிஷாவை இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லைங்க 96 படம் குறித்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் கூறியது, இந்த படத்தில் நடிக்காதது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார். மேலும், என்னை எப்படியாவது அணுகி இருந்தால் நிச்சயம் நான் 96 படத்தில் நடித்திருப்பேன் என கூறியதால் நடிகர் மஞ்சு வாரியார்.
இது ஒருபுறம் இருக்க, மஞ்சு வாரியர் அவர்கள் வயநாட்டில் உள்ள ஒரு பழங்குடி பிரிவினை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளார் என்றும், அவர் அளித்த உறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூறுகிறார்கள். மேலும்,மஞ்சு வாரியர் மோசடி செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. பழங்குடியினருக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பு செலவில் 50 குடும்பங்களுக்கு வீடு கட்டி தருகிறேன் என நடிகை மஞ்சு வாரியர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழிந்தும் வீடு சம்பந்தமாக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இப்படி சமூகவலைதளங்களில் நடிகை மஞ்சு வாரியர் சம்பந்தமாக வரும் அத்தனை தகவல்களும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தான் காரணம் என்று முடிவு செய்து போலீசில் புகார் செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையாள திரைஉலகில் சர்ச்சை வெடித்தது.
இப்படி ஒரு நிலையில் மஞ்சு வாரியாரின் பெயரில் இப்படி ஒரு மோசமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இது மஞ்சு வாரியரே இல்லை என்று புலம்பி வருகின்றனர். ஒரு வேலை உங்களுக்கு இது மஞ்சு வாரியார் போல தெரிகிறதா என்று கமன்ட்டில் கூறுங்கள்.