பிரபு சாலமன் -அஸ்வின் கூட்டணியில் உருவாகி இருக்கும் செம்பி பட இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் உருக்கமுடன் பேசி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் அஸ்வின் நடித்து இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.
என்ன சொல்ல போகிறாய் படம்:
பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது.
பிரபு சாலமனின் செம்பி :
ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவைசரளா நடிக்கிறார்.
பஸ்ஸில் நடக்கும் கதை :
அதுவும் 90 வயது பாட்டியாக கோவைசரளா, தம்பி ராமையா பஸ் கண்டக்டர் ஆகவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது.பிரபு சாலமனின் முந்தைய படங்களைப் போலவே இயற்கை அழகு சார்ந்த கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
கலங்கிய அஸ்வின் :
இந்த விழாவில் கமல் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய அஸ்வின் ‘பிரபு சாலமன் சாரை நான் சந்தித்தபோது இந்த படத்தில் என்னை நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேவா சார் என்றேன். ஏனென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் செல்லும்போது என்னுடைய பயணம் மிகவும் மோசமாக இருந்தது என்று பேச முடியாமல் பேசினார் அஸ்வின். இதைத் தொடர்ந்து கமல் பேசிய போது அஸ்வினை அழைத்து உங்களை பிடித்ததால் தான் இயக்குனர் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இது உங்களுக்கு பெரிய வாய்ப்பு என்று அஸ்வினுக்கு ஆறுதல் தெரிவித்தார்.