FDFSவை பார்க்க ஆசையா இருந்தேன் – தள்ளிப்போன தன் முதல் படம் – அஸ்வினின் உருக்கமான பதிவு.

0
627
aswin
- Advertisement -

தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் என்ன பேசுகிறோம் என்பதே பேச தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கி தவித்து வரும் அஸ்வின் பற்றி ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெண் ரசிகைகள் மத்தியில் பிரபலமானார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில ஆல்பம் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்த இவர்., தற்போது தான் ஹீரோவாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அஸ்வின், இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துவிட்டது நான் மிகவும் கஷ்டமாக இருக்கிறேன். நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை என்றாலும் ஒரு கெட்ட எடுத்துக்காட்டாக இருந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்.

- Advertisement -

அங்கு போய் நின்றதும் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று மிகவும் சோகத்துடன் கூறி இருந்தார். என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் இந்த மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்வைத்து திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அஸ்வினின் சர்ச்சை பேச்சால் தற்போது வெளியீட்டை அடுத்த ஆண்டு (2022) தள்ளிவைக்க தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின் ‘என்னுடைய முதல் படத்தின் முதல் காட்சிக்காக நான் பல நாட்கள் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது மீண்டும் தள்ளிப் போய்விட்டது. என்னிடம் மீதம் இருக்கும் அனைத்தையும் நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் வலிமையாக மீண்டு வந்து உங்களை மகிழ்விக்க வேலை செய்து வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் திரையரங்கில் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன். விதியை நம்புகிறேன்’என்று பதிவிட்டுள்ளார்

-விளம்பரம்-
Advertisement