இயக்குனர் அட்லீ மொத்தம் தற்போது இயக்கியுள்ள படங்கள் மூன்று மட்டுமே. ஆனால், மூன்று படமும் அவருக்கு மிகபெரிய ஒரு கமர்சியல் இயக்குனர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. இருந்தும் அவரது மூன்று படங்களுமே ஓர் வட்டத்திற்குள் காப்பி என விமர்சிக்கப்பட்டது ஒரு புறம் இருக்க, தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் அட்லீ.
தனது மனைவி ப்ரியாவுடன் ஹனி மூனுக்கு சென்றிருந்த அட்லீ தற்போது மீண்டும் சென்னை வந்துள்ளார். அத்துடன் சேர்த்து அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவங்கிவிட்டார்.
ராஜா ராணியில், ஜெய் மற்றும் ஆர்யா என இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தவர், தற்போது தனது 4ஆவது படத்தில் 3 ஹீரோக்களை வைத்து ஸ்க்ரிப்ட் எழுத தயாராகிவிட்டார். கமர்சியலாக படத்தினை ஹிட் கொடுத்து பழகிவிட்ட அட்லீக்கு 3 ஹீரோ என்பது அல்வா சாப்பிடுவது போல தான் இருக்கும் என்பதில் நிதர்சனம் இல்லை.
ஆனால், மூன்று ஹீரோ என்ற அறிவிப்பு வந்தவுடன் இது எந்த படத்தின் காப்பியாக இருக்கும் என பழைய படங்களை தேட ஆரம்பித்துவிட்டனர் விமர்சகர்கள்.