பொது நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு அதார் பட நடிகை. மூக்கில் குத்திய நபர். கொட்டிய ரத்தம். வைரலாகும் வீடியோ.

0
10940
noreen
- Advertisement -

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் இருக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுவது இயல்பான ஒன்று. அதிலும் பிரபலங்கள் அந்த மக்கள் கூட்டத்தில் இருந்து பத்திரமாக வெளியேறுவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுமட்டுமில்லாமல் இது மிக சவாலான விஷயமும் கூட. அப்படி பிரபல மலையாள நடிகை நூரின் ஷெரிப் அவர்கள் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தார். அப்போது அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் கதறி அழுந்துள்ளார். மேலும், அவர் கதறி அழும் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சமீபத்தில் திரையரங்கில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மலையாள நடிகை நூரின் ஷெரிப்.முதலில் பிரியா வாரியர் தான் பிரபலமாக இருந்தார். மேலும், அவர் புருவங்களை உயர்த்தி கண் அடிக்கும் வீடியோ ஒன்று மிகப்பெரிய அளவிற்கு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

-விளம்பரம்-
noorin shereef

இதன் மூலம் தான் அவர் அதிகமாகவே மக்களிடையே பேசப்பட்டார். இந்நிலையில் ‘ஒரு அடார் லவ்’ படம் வெளியான பிறகு நூரின் ஷெரிப் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், அந்த படத்தில் நூரின் ஷெரிப் உடைய நடிப்பும்,கதாபாத்திரம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார். அதற்கு பின்னர் நூரின் ஷெரிப்க்கு அதிக பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. நூரின் ஷெரிப் திரையுலகில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் ஒரு சுறுசுறுப்பான, துடிப்பான பெண். மேலும், அவர் பசங்களை போல பைக் ஓட்டுவது, ஏதாவது ஒரு சேட்டை செய்வது, அது மட்டும் இல்லாமல் ஆண் நண்பர்களுடன் சகஜமாக ஊர் சுற்றுவது என மிகவும் ஜாலியான டைப் கொண்டவர் நூரின் ஷெரிப். இந்நிலையில் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைக்க நூரின் ஷெரிப் சென்றுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்ஸின் 100 நாள் கொண்டாட்டம் ஒரே நாளில். வெளியான வீடியோ இதோ.

- Advertisement -

அங்கு வந்து நடிகை நூரின் ஷெரிப்பை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது என்று சொல்லலாம். மேலும், நிகழ்ச்சிக்கு நூரின் ஷெரிப் சற்று தாமதமாக தான் வந்தார் என்று தெரிய வருகிறது. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி நூரின் ஷெரிப் வந்த போது ரணகளமும்,அட்டகாசமும் செய்து வந்தார்கள். அப்போது நூரின் ஷெரிப் வந்த போது பரபரப்பாக இருந்தது. மேலும், எதிர்பாராவிதமாக ஒரு ரசிகரின் கை நூரின் ஷெரிப் முகத்தில் பட்டது எனவும், இதனால் அவருடைய மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது எனவும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நூரின் ஷெரிப் வலி தாங்க முடியாமல் மேடையிலேயே கதறி அழுந்தார். பின்பு சில நிமிடங்களுக்கு பிறகு வலியை பொறுத்துக்கொண்டு விழாவில் நூரின் ஷெரிப் கலந்து கொண்டார். மேலும்,நூரின் ஷெரிப் கூறியது, நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வரவில்லை என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டம் அதிகமாக வேண்டும் என்பதற்காக தன்னை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து உள்ளார்கள் என விளக்கமளித்தார்.

இது குறித்து நூரின் ஷெரிப் தாயார் கூறியது, ரசிகர்கள் தாக்கியதில் நூரின் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும்,அவளால் அந்த வலியை தாங்க முடியாமல் கதறி அழுது விட்டால் என்று கூறினார். மேலும், நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அவரை தகாத வார்த்தைகளால் பேசி கஷ்டப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சிக்கு வந்த நூரின் ஷெரிப் தாக்கப்பட்ட இந்த எதிர்பாராத சம்பவத்தை ரசிகர்கள் சிலர் தங்களுடைய மொபைல்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்கள் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement