விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவிற்காக அவருடைய அம்மா பார்த்து பார்த்து சமைத்து வைத்தார். நிலா தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்தாலும் சோழன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து சோழன், நிலாவிற்காக பரோட்டா வாங்கி வந்து தந்தார். நிலா, தன் அம்மா சமைத்த சமையலை சாப்பிடாமல் சோழனுடன் சேர்ந்து அவர் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவின் அம்மாவிற்கு பயங்கர கடுப்பானது.

நிலா, சோழலுடன் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மனோகர் கோபப்பட்டார். சோழன் சென்ற பிறகு நிலாவின் பெற்றோர்கள், சோழனை உனக்கு பிடிக்குமா? என்று கேட்டார்கள். நிலா, ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். நிலாவின் அம்மா, எதற்காக விவாகரத்து செய்தாய்? என்று கேட்டார். நிலாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சோழன், நிலா தன்னிடம் ரொம்ப சகஜமாக பேசியதை எல்லோரிடமும் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் போனில் நிலா- சோழன் இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டார்கள். நிலாவும் தன்னை புரிந்து கொண்டு காதலிக்க விடுவாள் என்று சோழன் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன், வானதியின் தோழிகள் அவர்களுடைய காதலனுடன் வருவதால் தன்னையும் வானதி வர சொல்லி இருந்தார் என்றார். இதனால் சோழன்- பல்லவன் இருவருமே பாண்டியனை அழகாக ரெடி பண்ணுகிறார்கள். பின் சேரன், சந்தாவுடன் போனில் பேசி கொண்டு சந்தோஷப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் வானதி உடன் சென்ற இடத்தில் அவருடைய நண்பர்கள் பாண்டியனை ரொம்ப கிண்டலாக பேசியிருந்தார்கள். இதனால் அவமானத்தில் பாண்டியன் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார். வானதி, எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்கிறார். பாண்டியன், இப்படி என்னை கிண்டல் செய்யும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை வந்துவிட்டேன். இதைப் பற்றி நான் நிலாவிடம் சொன்னேன். அவர்கள் என் மீது தான் தவறு என்று திட்டினார்கள் என்றார். இதை கேட்டவுடன் கோபத்தில் வானதி, அவர்கள் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்கிறாயா? என்று மீண்டும் வழக்கம் போல சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோகர், திருவண்ணாமலைக்கு சென்று விடலாம். உனக்கு வேலை செய்வதற்கான எல்லா ஏற்பாடும் செய்தி தருகிறேன் என்று பேசுகிறார். இதனால் நிலா, அதெல்லாம் முடியாது. நான் இங்கு தான் இருப்பேன் என்று பேசுவதால் மனோகரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் பார்த்து சேரன் வந்து விடுகிறார். சேரனிடம் ரொம்ப ஜாலியாக மனோகர் நிலாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் சேரனை வீட்டில் விடுவதற்காக மனோகர் அழைத்து வருகிறார். அப்போது மனோகர், சோழன்- நிலா இடையே விவாகரத்தை பற்றி எல்லாம் விசாரிக்கிறார். சேரனும் அமைதியாக இருக்கிறார்.






