சப்பு சப்புன்னு நாளு அர விட்டேன் – பாக்கியலட்சுமி ஜெனியிடம் சில்மிஷம் செய்து அடி வாங்கி இருக்கும் நபர். அதுவும் எங்க பாருங்க.

0
301
- Advertisement -

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பளார் என்று அறைந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால், திவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். குடும்ப இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் பாக்கியா கேண்டினை நல்லபடியாக நடத்திக் கொண்டு வருகிறார். எப்படியாவது கேண்டினை விட்டு பாக்கியாவை வெளியேற்ற வேண்டும் என்று ராதிகா பல திட்டங்களை தீட்டுகிறார். இருந்தாலும், பாக்கியா அதை எல்லாம் முறியடித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம், ராதிகா- இனியாவிற்கும் இடையே சண்டை முற்றுகிறது.

சீரியலின் கதை:

பின் கோபமடைந்த கோபி இனியாவிடம் கோபப்பட்டு திட்டுகிறார். இதனால் மணமுடைந்த இனியா மாத்திரையை சாப்பிட்டு விடுகிறார். இதை அறிந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி இனியாவை மருத்துவமனையில் சேர்கிறார். இனியா மருத்துவமனையில் இருப்பதை அறிந்த பாக்கியாவின் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு செல்கிறது. அங்கு கோபியிடம் எல்லோருமே சராமாரியாக சண்டை போடுகிறார்கள். பின் தன் மகள் இனியாவை நான் என்னிடமே அழைத்து செல்கிறேன் என்று பாக்கியா கூறுகிறார்.

-விளம்பரம்-

திவ்யா கணேஷ் குறித்த தகவல்:

ஆனால், கோபி முடியாது என்று மறுக்கிறார். இனியா கோபியுடன் செல்வாரா? இல்லை பாக்யா உடன் செல்வாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, கேளடி கண்மணி, செல்லம்மா போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.

நபரிடம் திவ்யா செய்த செயல்:

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் அவர்கள் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் விமானத்தில் பயணிக்கும் போது என் இடையில் ஏதோ ஓடுவது போன்ற உணர்வு இருந்தது. பார்த்தபோது எதுவும் இல்லை. மீண்டும் அதே மாதிரி உணர்வு ஏற்பட்டது. அப்போது இது ஒரு நபரின் கேவலமான செயல் என்பது எனக்கு புரிந்தது. நான் உடனே அந்த நபரின் கன்னத்திலேயே பளார் பளார் என்று 4 முறை வெளுத்து வாங்கினேன். இந்த மாதிரி நபர்களிடம் பொறுமையாக இல்லாமல் உடனடியாக அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement