‘நான் ஒரு முட்டாள், அதை நான் தெரிந்து கொண்டேன்’ – சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின் மீண்டும் வீடியோ வெளியிட்ட சதீஷ்.

0
580
Gopi
- Advertisement -

சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்த பின்னர் சதிஷ் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபி மீண்டும் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா என்னை விட்டு எப்படி நீ இந்த வீட்டிற்கு வரலாம் என்று அவரும் பாக்கிய வீட்டிற்கு வந்துவிட்டார்.

- Advertisement -

சீரியலில் இருந்து விலகிய சதிஷ் :

இப்படி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சதிஷ் அறிவித்திருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் ‘நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இதை செய்துதான் ஆக வேண்டும். இன்னும் 10 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சுமாராக நடித்திருக்கிறேன் :

சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுகிறேன். அதற்கு காரணங்கள் பல இருக்கிறது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு விஜய் டிவிக்கு மிக்க நன்றி. நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என்னை பாராட்டும் அளவிற்கு என்னால் முடிந்த அளவு சுமாராக நடித்திருக்கிறேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மீண்டும் கோபி வெளியிட்ட வீடியோ :

இவரின் இந்த அறிவிப்பை கேட்டு பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்த பின்னர் சதிஷ் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் வந்தாலே மிகவும் கஷ்டம் தான். ஏனென்றால் பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் தான் முடியும். ஆனால் அதைவிட ஒரு சிறப்பான விஷயத்தை நான் கற்றுக் கொண்டேன்.

நான் ஒரு முட்டாள்

நேற்று வரைக்கும் நான் நிறைய படித்து விட்டேன், பெரிய மேதாவி உலகத்தையே மாற்றி விடலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அப்படி இல்லை நான் ஒரு முட்டாள், அதை நான் தெரிந்து கொண்டேன். இப்போது நான் ஒரு அறிவாளி, என்னைப்பற்றி தெரிந்து கொண்டு என்னையே நான் மாற்றிக் கொண்டேன். உலகத்தை மாற்ற முடியாது ஆனால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும், மாற்றிக் கொள்ள முடியும். அதை மட்டும் தான் என்னால் செய்ய முடியும், முயற்சியே திருவினை’ என்று கூறியுள்ளார்.

Advertisement