காலில் விழுந்து கதறியும் கண்டுகொள்ளாமல் சென்ற ராதிகா,மூன்றாம் திருமணம் செய்ய முடிவெடுத்தாரா கோபி. புகைப்படத்தை கண்டு ஷாக்.

0
491
Gopi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீண்டும் மாலை கழுத்துடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஷாக்காகி பதிவிட்டு இருக்கும் கமெண்ட் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் இவர்களுடன் லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால், திவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

- Advertisement -

கோபி செய்த ரகளை :

தற்போது சீரியலில் கோபி, ராதிகா செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். இதனால் ராதிகா கோபியிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறப் போனார். எப்படியோ ராதிகாவை சமாளித்து வீட்டிற்கு கோபி அழைத்து வந்தார். இதையெல்லாம் பார்த்த கோபியின் அம்மா ஈஸ்வரி அழுகிறார். பின் கோபியை அழைத்து நம்முடைய வீட்டிற்க்கே வந்துவிடு என்று கேட்கிறார். இதையெல்லாம் ராதிகா பார்த்து மீண்டும் சண்டை போடுகிறார். வழக்கம்போல் கோபி குடித்துவிட்டு ரோடில் விழுந்து கிடக்கிறார்.

சீரியலின் கதை:

இந்த முறை செழியன் கோபியை அழைத்துக்கொண்டு பாக்கியா வீட்டிற்கு வருகிறார். இனிமேல் இங்குதான் கோபி இருப்பான் என்று ஈஸ்வரி கூறுகிறார். என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார் பாக்கியா. கோபி, பாக்கியா வீட்டில் இருப்பது ராதிகாவிற்கு தெரிய வருமா? கோபி மீண்டும் ராதிகாவிடம் செல்வாரா? இல்லையா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சதீஸ் குறித்த தகவல்:

அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். சதீஷை பாக்யலக்ஷ்மி சீரியல் மூலம் தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதற்கு முன் சதீஸ் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சினிமாவில் மின்சாரப்பூவே படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் . அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்தார். மேலும், சிறந்த குணச்சித்திர நடிகராக சதீஸ் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் பல நாடகங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மாடலிங் செய்தும், பல விளம்பரங்களில் நடித்தும் உள்ளார்.

சதீஸ் இன்ஸ்டா பதிவு:

தற்போது சதீஸ் சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை உருவாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்நிலையில் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மாலையோடு இருக்கிறீர்களே, இரண்டாவது டைவர்ஸ்? மூன்றாவது திருமணமா? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கோபி இல்லைங்க என்னோட சாவுக்கு நானே மாலையோட ரெடியாகிவிட்டேன் என்று காமெடியாக பதில் அளித்து இருக்கிறார். தற்போது கோபியின் இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement