’10 வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல் போக ஆரம்பிச்சவ இன்னும் போயிட்டு இருக்கா’ Troll வீடியோவிற்கு இனியா போட்ட கமன்ட்.

0
907
Neha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபி மீண்டும் பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா என்னை விட்டு எப்படி நீ இந்த வீட்டிற்கு வரலாம் என்று அவரும் பாக்கிய வீட்டிற்கு வந்துவிட்டார்.

- Advertisement -

சீரியலில் இருந்து விலகிய சதிஷ் :

இப்படி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இந்த தொடரில் இருந்து விலகுவதாக சதிஷ் அறிவித்திருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் அவர் ‘நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இதை செய்துதான் ஆக வேண்டும். இன்னும் 10 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

நேஹா :

இந்த தொடரில் சதீசுக்கு பின் அடிக்கடி விமர்சனங்களுக்கு உள்ளானது இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா தான். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக அறிமுக,அறிமுகமானவர். அதிலும் வாணி ராணி தொடரில் இவர் தேனு என்ற கதாபாத்திரத்தில் பள்ளி செல்லும் சிறுமியாக நடித்து இருந்தார். ஆனால், தற்போதும் இவர் பாக்கியலட்சுமி தொடரில் பள்ளி செல்லும் சிறுமியாகவே நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கேலி செய்த பதிவுக்கு நேஹாவின் கமண்ட் :

இதனால் இவர் அடிக்கடி கேலிக்கு உள்ளாகி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாவில் இவர் வாணி ராணியில் நடித்த காட்சியை பகிர்ந்து ’10 வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல் போக ஆரம்பிச்சவ இன்னும் ஸ்கூலுக்கு போயிட்டு படிச்சிட்டு இருக்கா என்று வடிவேலு மீமை போட்டு கலாய்த்து இருந்தார்கள்’ இந்த வீடியோவை கண்ட நேஹா சிரித்தபடி ஒரு எமோஜியை படு கூலாக பதிவிட்டுள்ளார்.

எத்தனை முறை லவ் வரும் :

சமீபத்தில் தான் இனியா தன்னுடன் பயிலும் மாணவனை காதலிப்பது போல காட்டப்பட்டு இருந்தது . இப்படி சீரியலில் இளமை முதல் வயதானவர்கள் வரை காதலிக்கும் காட்சிகள் வருவதால் நெட்டிசன்கள் இதை பங்கமாக கலாய்த்துவந்தனர் . அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே இனியா காதலிக்கும் காட்சிகள் வந்தது, மீண்டும் அவர் காதலிப்பது போல வந்ததால் ஒரு பள்ளி மாணவிக்கு இத்தனை காதல் வருமா? என்றெல்லாம் கிண்டல் செய்தனர்.

இனியா பதிலடி :

இப்படி ஒரு நிலையில் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இனியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ”12th பசங்க இப்போ லவ் எல்லாம் பண்ணாம தான் இருக்காங்களோ ?படங்களில் ஸ்கூல் பெண் காதலி உங்களுக்கு ஓகே ஆனால் சீரியலில் காண்பித்தால் நீங்கள் குழந்தைகளை தவறாக வழி நடத்துகிறீர்கள் என்று சொல்றீங்க. ஏன்டா ஏன். மேலும், இது எல்லாம் கதாபாத்திரம் தான் உண்மை ஒன்றும் கிடையாது, நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்காக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறி இருந்தார்.

Advertisement