மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர முடிவெடுத்த கோபி – என்ன பிரச்சனை, எப்படி தீர்ந்தது. கோபி வெளியிட்ட வீடியோ.

0
365
gopi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் என்ட்ரியாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா- கோபி இருவருமே பாக்யாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களை வெளியே அனுப்ப பார்க்கிறார்கள். ஆனால், இருவருமே போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

- Advertisement -

என்ன செய்வதென்று புரியாமல் பாக்யாவும், மொத்த குடும்பமும் குழப்பத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தான் ஜெனி கீழே விழுந்து வயிற்றில் அடிபடுகிறது. உடனே ராதிகா அவரை மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். ஆனால், ராதிகா தான் ஜெனியே கீழே தள்ளிவிட்டார் என்று ஈஸ்வரி கோபப்படுகிறார். இதனால் ராதிகா-கோபி வெளியே போவார்களா? பாக்யா ராதிகாவிற்கு உறுதுணையாக நிற்பாரா? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சதீஸ் குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கோபியாக நடிக்கும் சதிஷ் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்ததார். இதுகுறித்து சதிஷ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர், ‘நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும், இதை செய்துதான் ஆக வேண்டும்.

-விளம்பரம்-

சீரியலில் விலகும் கோபி:

இன்னும் 10 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுகிறேன். அதற்கு காரணங்கள் பல இருக்கிறது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறி இருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலருமே வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் அவருக்கு விருது வழங்காமல் இருந்ததே அவருடைய விலகலுக்கு காரணம் என்று பல சர்ச்சைகளும் கிளப்பியிருந்தார்கள்.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் சதீஸ்:

இந்த நிலையில் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், 10 நாட்களுக்கு முன்னாடி நான் உணர்ச்சிவசப்பட்டு சில பர்சனல் காரணங்களால் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க மாட்டேன் தொடரை விட்டு விலகப் போகிறேன் என்று போஸ்ட் பண்ணி இருந்தேன். இப்போது அந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிட்டது. நான் கேட்ட சில கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது. இப்போது முழு மனதோடு தொடர்ந்து சீரியலில் நடிக்கப் போகிறேன். உங்களுடைய ஆதரவுக்கு நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement