விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, ரெஸ்டாரண்ட் விஷயத்தில் நானே முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். பின் இனியாவிடம் பேசிய பாக்கியா, நான் எந்த முடிவு எடுத்தாலும் உனக்கு சம்மதமா? என்று கேட்டார். இனியா, எனக்காக நீங்கள் நிறைய தியாகம் செய்துவிட்டீர்கள். இந்த ரெஸ்டாரண்டை விடாதீர்கள். கல்யாணம் நின்றாலும் எனக்கு கவலை இல்லை என்று சொன்னார். பின் கோபி, சுதாகரை சந்தித்து பேசி இருந்தார். அப்போது சுதாகர், நான் ரெஸ்டாரண்ட் பெயரை மாற்றி வைக்க தான் சொன்னேன். மற்றபடி பொறுப்பெல்லாம் அவர்கள் தான். இதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று அப்படியே மாத்தி பேசி விட்டார்.
சுதாகர், சம்மந்தி நினைக்கிற மாதிரி நான் ரெஸ்டாரண்டை நானே எடுத்துக்கொள்ள போவதில்லை. இந்த ரெஸ்டாரண்டுக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொன்னார். கோபியும் அதை நம்பி விட்டார். பின் வீட்டில் இனியா நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருந்தார். அப்போது அவர், அம்மா ரெஸ்டாரண்டை விட்டுக் கொடுத்து இந்த கல்யாணம் தேவையில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். உடனே அமிர்தா, எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப்பற்றி கவலைப்படாதே என்றார். பின் வீட்டுக்கு வந்த கோபி, சுதாகர் சொன்னதை சொன்னார். ஆனால், பாக்கியாவிற்கு நம்பிக்கையே இல்லை.
பாக்கியலட்சுமி:
பின் மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு நடைபெறுவதற்கு முன்பு சுதாகரிடம் பாக்கியா குடும்பம் பேசி இருந்தார்கள். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்டில் பெயர் மட்டும்தான் மாறும் என்றால் எனக்கு சம்மதம். ஆனால், எதுவாக இருந்தாலும் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னவுடன் சுதாகர் ஷாக் ஆனார். எப்படியாவது ரெஸ்டாரண்டை எடுக்க நினைத்தார். பாக்கியா குடும்பம் கொஞ்சம் ரொம்ப புத்திசாலித்தனமாக இருப்பதால் அதை வேற மாதிரி டீல் செய்ய வேண்டும் என்று தன்னுடைய மேனேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சுதாகர்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சுதாகர், எம்டியாக இருக்கும் டாக்குமென்டை கொடுத்து கையெழுத்து போட சொன்னார். பாக்கியா, எதுவுமே எழுதவில்லை. எப்படி கையெழுத்து போடுவது என்று கேட்டார். அதற்கு சுதாகர், நான் அப்புறமாக எழுதிக் கொள்கிறேன். திடீரென்று சொன்னதால் இதில்கையெழுத்து போடுங்கள். நான் இங்கு சொன்னதை தான் ஒரு வரி மாறாமல் எழுதிவிடுகிறேன். வேறு எதுவும் எழுத மாட்டேன் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார். கோபி, ஈஸ்வரி எல்லோருமே பாக்கியாவை கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால், அரை மனதோடு தான் பாக்கியா விருப்பமே இல்லாமல் தன் மகளுக்காக கையெழுத்து போட்டு கொடுத்தார்.
சீரியல் ட்ராக்:
பின் தன்னுடைய வருங்கால மருமகன் இடம் பாக்கியா ரொம்ப எமோஷனலாக இனியாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. மணக்கோலத்தில் இனியா தயாராகி மேடைக்கு வந்தார். வீட்டில் உள்ள எல்லோரும் இனியாவை ரொம்ப எமோஷனல் ஆகி இருந்தார்கள். அப்போது பாக்கியாவை அழைத்த இனியா, உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால் சொல்லுங்கள். நான் இப்போதே கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன் என்று சொன்னார். ஆனால், பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விட்டார். இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் நடக்கிறது. இனியா எல்லோரிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்தது. வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி ரொம்ப எமோசனலாக இனியா பேசிக் கொண்டிருக்கிறார்.
பின் பாக்யாவின் வீட்டிற்கு இனியாவையும் அவருடைய கணவரையும் அழைத்து செல்கிறார்கள். அங்கு பாக்கியா,உன் படிப்பையும் வேலையையும் விட்டு விடாதே என்று அறிவுரை சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிவிட்டு அழுது கொண்டே இனியா தன்னுடைய கணவர் வீட்டுக்கு செல்கிறார். பின் இனியா மாமியார் வீட்டில் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்து உபசரிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இனியாவை விளக்கேற்றி வைத்து சாமி கும்பிட சொல்கிறார்கள். நல்லபடியாக எல்லா சடங்குகளையுமே முடித்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.